• Jun 04 2025

சட்டவிரோத அகழ்வு நடவடிக்கை: மூவர் கைது..!

Sharmi / Jun 2nd 2025, 11:41 am
image

சட்டவிரோதமாக அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லாஹூகல, கொடவெஹெர வனப் பகுதியில் பொத்துவில் பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்றையதினம்(1) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 40 மற்றும் 41 வயதுடைய பொத்துவில், அட்டாளைச்சேனை மற்றும் இரத்மலானை பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து அகழ்வு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


சட்டவிரோத அகழ்வு நடவடிக்கை: மூவர் கைது. சட்டவிரோதமாக அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லாஹூகல, கொடவெஹெர வனப் பகுதியில் பொத்துவில் பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்றையதினம்(1) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 40 மற்றும் 41 வயதுடைய பொத்துவில், அட்டாளைச்சேனை மற்றும் இரத்மலானை பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து அகழ்வு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement