• Jun 13 2025

ஏர் இந்திய விமான விபத்து நடந்தது எப்படி? - டிஜிசிஏ போக்குவரத்து ஆணையகம் விளக்கம்..!

shanuja / Jun 13th 2025, 12:03 am
image


குஜராத் - அகமதாபாத்தில் இடம்பெற்ற விமான விபத்து தொடர்பில்  டிஜிசிஏ எனப்படும் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் விளக்கமளித்துள்ளது. 


இது தொடர்பில் டிஜிசிஏ விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் உள்ளதாவது, 


விமானத்தை கேப்டன் சுமீத் சபர்வாலும், கிளிவ் குந்தரும் இயக்கினர். சுமீத் சபர்வால் 8200 மணி நேரம் விமானத்தை இயக்கிய அனுபவம் உண்டு. துணை விமானிக்கு 1100 மணி நேரம் விமானத்தை இயக்கி உள்ளார்.


இந்திய நேரப்படி 1: 39 மணிக்கு விமானம் 23வது ஓடுபாதையில் இருந்து கிளம்பியது. கிளம்பிய சிறிது நேரத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு(ஏடிசி) அவசர அழைப்பு வந்தது. பிறகு, ஏடிசி முயற்சி செய்தும் எந்த பதிலும் கிடைக்கவில்லை.


ஓடுபாதையில் இருந்து கிளம்பிய உடனே விமான நிலையம் அருகே நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்தில் கடுமையான புகை மூட்டமாக காணப்பட்டது. தீயணைப்புப் பிரிவனரும், அதிகாரிகளும் விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

ஏர் இந்திய விமான விபத்து நடந்தது எப்படி - டிஜிசிஏ போக்குவரத்து ஆணையகம் விளக்கம். குஜராத் - அகமதாபாத்தில் இடம்பெற்ற விமான விபத்து தொடர்பில்  டிஜிசிஏ எனப்படும் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் விளக்கமளித்துள்ளது. இது தொடர்பில் டிஜிசிஏ விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் உள்ளதாவது, விமானத்தை கேப்டன் சுமீத் சபர்வாலும், கிளிவ் குந்தரும் இயக்கினர். சுமீத் சபர்வால் 8200 மணி நேரம் விமானத்தை இயக்கிய அனுபவம் உண்டு. துணை விமானிக்கு 1100 மணி நேரம் விமானத்தை இயக்கி உள்ளார்.இந்திய நேரப்படி 1: 39 மணிக்கு விமானம் 23வது ஓடுபாதையில் இருந்து கிளம்பியது. கிளம்பிய சிறிது நேரத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு(ஏடிசி) அவசர அழைப்பு வந்தது. பிறகு, ஏடிசி முயற்சி செய்தும் எந்த பதிலும் கிடைக்கவில்லை.ஓடுபாதையில் இருந்து கிளம்பிய உடனே விமான நிலையம் அருகே நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்தில் கடுமையான புகை மூட்டமாக காணப்பட்டது. தீயணைப்புப் பிரிவனரும், அதிகாரிகளும் விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement