குஜராத் மாநிலம் -அகமதாபாத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் இதுவரையில் 204 நபர்களின் உடல் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகமதாபத்தில் இருந்து 242 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் (போயிங் 787 -8 டிரீம் லைனர்) லண்டனுக்கு மதியம் 1:38 மணிக்கு புறப்பட்டது.
புறப்பட்ட 32 வினாடிகளிலேயே இந்த விமானம், விமான நிலையம் அருகே இருந்த மருத்துவக் கல்லூரி விடுதி மற்றும் குடியிருப்புகள் மீது விழுந்து விபத்துக்குள்ளாகியது.
விமானம் அதிகபட்சமாக 825 அடி உயரம் மட்டுமே சென்றிருந்தது.அதற்கு மேல் பறக்க முடியாமல், கீழே விழுந்து நொறுங்கியுள்ளது.
வழக்கமாக விமானம் பறக்கத் தொடங்கியவுடன், அதன் லேண்டிங் கியர் (டயர்) மேலே இழுத்துக் கொள்ளப்படும்.ஆனால் ஏதோ தொழில்நுட்ப கோளாறு காரணமாக, லேண்டிங் கியர் அப்படியே வெளியே நீட்டிக் கொண்டிருந்தது வீடியோ காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.
விமானத்தில் சென்றவர்களில் பயணி ஒருவரை தவிர மற்ற பயணிகள், ஊழியர்கள் என 241 பேரும் உயிரிழந்துள்ளதாக அஞ்சப்படுகிறது. விபத்துக்குள்ளான போயிங் 787 -8 டிரீம் லைனர் விமானத்தில் 169 பேர் இந்தியர்கள், 43 பேர் பிரிட்டனை சேர்ந்தவர்கள், ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர், போர்த்துக்கல்லைச் சேர்ந்த 7 பேர் அவர்களுடன் 12 ஊழியர்களும் என 242 பயணிகள் பயணித்தனர்.
இவர்களில் ஒருவர் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்து விட்டதாக அஞ்சப்பட்டு வரும் நிலையில் தற்போது வரை 204 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒரு சிலரது சடலங்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்துள்ளன. அவற்றை உறவினர்கள் டி.என்.ஏ. பரிசோதனை மூலம் கண்டறிய மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த விமானத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் பயணித்துள்ளார். அவர், லண்டனில் இருக்கும் தன் குடும்பத்தினரை பார்ப்பதற்காக புறப்பட்டு சென்ற நிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்து விட்டதாக, இன்று இரவு 7 மணியளவில் இந்திய அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.
மீதமுள்ள பயணிகளை மீட்கும் நடவடிக்கையை அரசு தீவிரமாக செயற்படுத்தி வருவதுடன் இந்த விமான விபத்து இந்தியாவை மட்டுமல்லாது உலகத்தையே உலுக்கிய ஓர் துயரச் சம்பவமாக பதிவாகியுள்ளது.
இந்தியாவை உலுக்கிய விமான விபத்து - இதுவரையில் 204 நபர்களின் உடல் மீட்பு. குஜராத் மாநிலம் -அகமதாபாத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் இதுவரையில் 204 நபர்களின் உடல் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகமதாபத்தில் இருந்து 242 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் (போயிங் 787 -8 டிரீம் லைனர்) லண்டனுக்கு மதியம் 1:38 மணிக்கு புறப்பட்டது. புறப்பட்ட 32 வினாடிகளிலேயே இந்த விமானம், விமான நிலையம் அருகே இருந்த மருத்துவக் கல்லூரி விடுதி மற்றும் குடியிருப்புகள் மீது விழுந்து விபத்துக்குள்ளாகியது. விமானம் அதிகபட்சமாக 825 அடி உயரம் மட்டுமே சென்றிருந்தது.அதற்கு மேல் பறக்க முடியாமல், கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. வழக்கமாக விமானம் பறக்கத் தொடங்கியவுடன், அதன் லேண்டிங் கியர் (டயர்) மேலே இழுத்துக் கொள்ளப்படும்.ஆனால் ஏதோ தொழில்நுட்ப கோளாறு காரணமாக, லேண்டிங் கியர் அப்படியே வெளியே நீட்டிக் கொண்டிருந்தது வீடியோ காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.விமானத்தில் சென்றவர்களில் பயணி ஒருவரை தவிர மற்ற பயணிகள், ஊழியர்கள் என 241 பேரும் உயிரிழந்துள்ளதாக அஞ்சப்படுகிறது. விபத்துக்குள்ளான போயிங் 787 -8 டிரீம் லைனர் விமானத்தில் 169 பேர் இந்தியர்கள், 43 பேர் பிரிட்டனை சேர்ந்தவர்கள், ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர், போர்த்துக்கல்லைச் சேர்ந்த 7 பேர் அவர்களுடன் 12 ஊழியர்களும் என 242 பயணிகள் பயணித்தனர். இவர்களில் ஒருவர் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்து விட்டதாக அஞ்சப்பட்டு வரும் நிலையில் தற்போது வரை 204 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒரு சிலரது சடலங்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்துள்ளன. அவற்றை உறவினர்கள் டி.என்.ஏ. பரிசோதனை மூலம் கண்டறிய மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.இந்த விமானத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் பயணித்துள்ளார். அவர், லண்டனில் இருக்கும் தன் குடும்பத்தினரை பார்ப்பதற்காக புறப்பட்டு சென்ற நிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்து விட்டதாக, இன்று இரவு 7 மணியளவில் இந்திய அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.மீதமுள்ள பயணிகளை மீட்கும் நடவடிக்கையை அரசு தீவிரமாக செயற்படுத்தி வருவதுடன் இந்த விமான விபத்து இந்தியாவை மட்டுமல்லாது உலகத்தையே உலுக்கிய ஓர் துயரச் சம்பவமாக பதிவாகியுள்ளது.