யாழில் பிறந்து 4 மாதங்களேயான ஆண் குழந்தை ஒன்று நேற்றையதினம் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வரணி - இயற்றாலை பகுதியைச் சேர்ந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த குழந்தை கடந்த 23ஆம் திகதி சுவாசிப்பதற்கு சிரமப்பட்ட ஏற்பட்ட நிலையில், குடும்பத்தினர் அவசரமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி குறித்த குழந்தை நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளது.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்காக உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
சுவாசிப்பதற்கு சிரமப்பட்ட நான்கு மாத குழந்தை பலி; யாழில் சோகச் சம்பவம் யாழில் பிறந்து 4 மாதங்களேயான ஆண் குழந்தை ஒன்று நேற்றையதினம் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வரணி - இயற்றாலை பகுதியைச் சேர்ந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த குழந்தை கடந்த 23ஆம் திகதி சுவாசிப்பதற்கு சிரமப்பட்ட ஏற்பட்ட நிலையில், குடும்பத்தினர் அவசரமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.இருப்பினும் சிகிச்சை பலனின்றி குறித்த குழந்தை நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளது. குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்காக உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.