• Jul 01 2025

பாம்பு கடித்ததால் இரு பிள்ளைகளின் தந்தை பலி- மட்டக்களப்பில் துயரம்!

Thansita / Jul 1st 2025, 6:04 pm
image

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி, திருநீற்றுக்கேணி கிராமத்தில் பாம்பு தீண்டி இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் பரிதாபகரமான முறையில் பலியானதாக தெரியவருகிறது

யோகராசா தில்லைவாசகம் என்னும் இரண்டு பெண் பள்ளைகளின் தந்தையான 38 வயது நபரே இவ்வாறு பலியானதாக அடையாளம் காணப்பட்டுள்ளார் .

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்


இன்று மாலை 1.30pm மணி அளவில் குறித்த நபர் தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள  குளக்கட்டு வழியாக நடந்து வந்து கொண்டிருந்த போது  பாம்பு தீண்டியதாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த திருநீற்றுக்கேணியில் நீண்ட காலமாக  பாம்புகள் இருப்பதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர் 

அதேநேரம் முதலைகளின் தொல்லைகளும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது .


மரணமானவரின் சடலம் ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது 

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


பாம்பு கடித்ததால் இரு பிள்ளைகளின் தந்தை பலி- மட்டக்களப்பில் துயரம் மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி, திருநீற்றுக்கேணி கிராமத்தில் பாம்பு தீண்டி இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் பரிதாபகரமான முறையில் பலியானதாக தெரியவருகிறதுயோகராசா தில்லைவாசகம் என்னும் இரண்டு பெண் பள்ளைகளின் தந்தையான 38 வயது நபரே இவ்வாறு பலியானதாக அடையாளம் காணப்பட்டுள்ளார் .குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்இன்று மாலை 1.30pm மணி அளவில் குறித்த நபர் தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள  குளக்கட்டு வழியாக நடந்து வந்து கொண்டிருந்த போது  பாம்பு தீண்டியதாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.குறித்த திருநீற்றுக்கேணியில் நீண்ட காலமாக  பாம்புகள் இருப்பதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர் அதேநேரம் முதலைகளின் தொல்லைகளும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது .மரணமானவரின் சடலம் ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Advertisement

Advertisement

Advertisement