கடந்த அரசாங்கங்களை விட தற்போதைய அரசாங்கத்தில் கல்விக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது என்று கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் டாக்டர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
அனைவருக்குமான கல்வி பற்றிய உயர்மட்ட தரப்பினருக்கு விழிப்புணர்வூட்டுதல் மற்றும் கொள்கை மீளாய்வு - 2025 நிகழ்ச்சித்திட்டம் இன்று (26) கொழும்பில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது அரசாங்கத்தின் கொள்கைகளில் நாங்கள் கல்விக்கு முன்னுரிமை வழங்கியுள்ளோம். அனைவரையும் உள்ளடக்கிய கல்வி எமது நாட்டுக்கு மிகவும் அவசியம் என்று பலர் அறிந்திருப்பினும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதற்கான முன்னுரிமை வழங்கப்படவில்லை.
எமது அரசாங்கத்தின் கீழ் நாங்கள் அனைவரையும் உள்ளடக்கிய கல்வி தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, முன்னுரிமை வழங்குவதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அது அரசாங்கத்தின் கொள்கையின் பிரதானமான அலகாகும்.
அனைவரையும் உள்ளடக்கிய கல்வியின் அடிப்படைதான் பிள்ளைகளை அடையாளம் காண்பதாகும். சுகாதாரப் பிரிவுகளில் அடையாளம் காணுதலை மேற்கொள்கிறார்கள். ஆனால், சில சந்தர்ப்பங்களில் அதற்கும் அப்பால் சென்று பிள்ளைகளை அடையாளம் காணும் முறைமை அவசியம். அவ்வாறின்றேல், எம்மிடமிருந்து பிள்ளைகள் தவறிச்செல்ல முடியும். அதனால், பிள்ளைகளை அடையாளம் காண்பதற்கான விசேட தேவைப்பாடு இருக்கிறது.
முதலில், அந்த அடையாளங்களைக் கண்டுக்கொள்கின்றவர்கள் பிள்ளைகளுடன் நேரடியாகப் பழகுகின்ற பெற்றோர்கள் ஆவர். அதற்கடுத்து ஆசியரியர்கள்.
ஆசிரியர்களுக்கு பிள்ளைகளை அடையாளம் கண்டுகொள்வதற்கான விஷேட திறமை இருக்க வேண்டும். ஒரு சில பிள்ளைகளுக்கு விஷேட தேவைகள் இருப்பின் அவற்றை அடையாளம் காண்பதற்கான திறன் எல்லா ஆசிரியர்களுக்கும் இருக்க வேண்டும். அடையாளம் கண்டுகொள்வது மாத்திரம் போதுமானது அல்ல ஈடுபடுத்துதலை அதற்கடுத்து மேற்கொள்ள முடியும்.- என்றார்.
அநுர அரசாங்கத்தில் கல்விக்கு முன்னுரிமை - கல்வி பிரதி அமைச்சர் தெரிவிப்பு கடந்த அரசாங்கங்களை விட தற்போதைய அரசாங்கத்தில் கல்விக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது என்று கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் டாக்டர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.அனைவருக்குமான கல்வி பற்றிய உயர்மட்ட தரப்பினருக்கு விழிப்புணர்வூட்டுதல் மற்றும் கொள்கை மீளாய்வு - 2025 நிகழ்ச்சித்திட்டம் இன்று (26) கொழும்பில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எமது அரசாங்கத்தின் கொள்கைகளில் நாங்கள் கல்விக்கு முன்னுரிமை வழங்கியுள்ளோம். அனைவரையும் உள்ளடக்கிய கல்வி எமது நாட்டுக்கு மிகவும் அவசியம் என்று பலர் அறிந்திருப்பினும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதற்கான முன்னுரிமை வழங்கப்படவில்லை. எமது அரசாங்கத்தின் கீழ் நாங்கள் அனைவரையும் உள்ளடக்கிய கல்வி தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, முன்னுரிமை வழங்குவதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அது அரசாங்கத்தின் கொள்கையின் பிரதானமான அலகாகும்.அனைவரையும் உள்ளடக்கிய கல்வியின் அடிப்படைதான் பிள்ளைகளை அடையாளம் காண்பதாகும். சுகாதாரப் பிரிவுகளில் அடையாளம் காணுதலை மேற்கொள்கிறார்கள். ஆனால், சில சந்தர்ப்பங்களில் அதற்கும் அப்பால் சென்று பிள்ளைகளை அடையாளம் காணும் முறைமை அவசியம். அவ்வாறின்றேல், எம்மிடமிருந்து பிள்ளைகள் தவறிச்செல்ல முடியும். அதனால், பிள்ளைகளை அடையாளம் காண்பதற்கான விசேட தேவைப்பாடு இருக்கிறது.முதலில், அந்த அடையாளங்களைக் கண்டுக்கொள்கின்றவர்கள் பிள்ளைகளுடன் நேரடியாகப் பழகுகின்ற பெற்றோர்கள் ஆவர். அதற்கடுத்து ஆசியரியர்கள்.ஆசிரியர்களுக்கு பிள்ளைகளை அடையாளம் கண்டுகொள்வதற்கான விஷேட திறமை இருக்க வேண்டும். ஒரு சில பிள்ளைகளுக்கு விஷேட தேவைகள் இருப்பின் அவற்றை அடையாளம் காண்பதற்கான திறன் எல்லா ஆசிரியர்களுக்கும் இருக்க வேண்டும். அடையாளம் கண்டுகொள்வது மாத்திரம் போதுமானது அல்ல ஈடுபடுத்துதலை அதற்கடுத்து மேற்கொள்ள முடியும்.- என்றார்.