• Jun 27 2025

1580 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் -கிண்ணியாவில் இளைஞன் கைது!

Thansita / Jun 26th 2025, 9:39 pm
image

1580 வெளிநாட்டு சிகரெட்டுகளை தனது உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், நேற்று(26) இரவு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா - முனைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த, 25 வயதான  இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். 

கிண்ணியா பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என கிண்ணியா குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மேலதிக நடவடிக்கைகளுக்காக, சந்தேக நபரை நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

1580 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் -கிண்ணியாவில் இளைஞன் கைது 1580 வெளிநாட்டு சிகரெட்டுகளை தனது உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், நேற்று(26) இரவு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.கிண்ணியா - முனைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த, 25 வயதான  இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். கிண்ணியா பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என கிண்ணியா குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.மேலதிக நடவடிக்கைகளுக்காக, சந்தேக நபரை நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement