இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள பாலஸ்தீன இடங்களுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அனுப்புவதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுதந்திர பாலஸ்தீன நாடு என்ற நிலைப்பாட்டை இலங்கை தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாகவும், பாலஸ்தீனத்திற்கு எதிரான இஸ்ரேலின் விரோதப் போக்கை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
இலங்கை இஸ்ரேலுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அனுப்புவதை நிறுத்த வேண்டும் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமின் சமீபத்திய அறிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ஹக்கீம் பல அரசாங்கங்களில் அமைச்சராக இருந்துள்ளார், ஆனால் இலங்கை தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்புவதை நிறுத்த எதுவும் செய்யவில்லை.
இஸ்ரேலுடனான பொருளாதார உறவுகளை இலங்கை திடீரென நிறுத்த முடியாது என்றும், பல நாடுகளைப் போல இஸ்ரேலுடனான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை இலங்கை தொடரும்.
"இஸ்ரேலுடனான உறவுகளை இலங்கை திடீரென நிறுத்தினால், அது பொருளாதாரத்தை பாதிக்கும். சில இலங்கையர்களும் தற்போது இஸ்ரேலில் வேலை செய்கிறார்கள். பாலஸ்தீனத்துடன் நிற்கும் ஆனால் இராஜதந்திர மற்றும் பொருளாதார நோக்கங்களுக்காக இஸ்ரேலுடன் உறவுகளைத் தொடரும் சவுதி அரேபியா, சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளைப் போலவே இலங்கையும் செயல்படும்.
இலங்கை ஒரு சுதந்திர பாலஸ்தீன நாடு மற்றும் ஒரு சுதந்திர இஸ்ரேல் அரசை நம்புகிறது என்றும், இலங்கை இஸ்ரேலுடன் அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளைத் தொடர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இஸ்ரேலுடனான பொருளாதார உறவுகளை திடீரென நிறுத்த முடியாது:அமைச்சர் பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டு. இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள பாலஸ்தீன இடங்களுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அனுப்புவதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,சுதந்திர பாலஸ்தீன நாடு என்ற நிலைப்பாட்டை இலங்கை தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாகவும், பாலஸ்தீனத்திற்கு எதிரான இஸ்ரேலின் விரோதப் போக்கை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.இலங்கை இஸ்ரேலுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அனுப்புவதை நிறுத்த வேண்டும் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமின் சமீபத்திய அறிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ஹக்கீம் பல அரசாங்கங்களில் அமைச்சராக இருந்துள்ளார், ஆனால் இலங்கை தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்புவதை நிறுத்த எதுவும் செய்யவில்லை.இஸ்ரேலுடனான பொருளாதார உறவுகளை இலங்கை திடீரென நிறுத்த முடியாது என்றும், பல நாடுகளைப் போல இஸ்ரேலுடனான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை இலங்கை தொடரும்."இஸ்ரேலுடனான உறவுகளை இலங்கை திடீரென நிறுத்தினால், அது பொருளாதாரத்தை பாதிக்கும். சில இலங்கையர்களும் தற்போது இஸ்ரேலில் வேலை செய்கிறார்கள். பாலஸ்தீனத்துடன் நிற்கும் ஆனால் இராஜதந்திர மற்றும் பொருளாதார நோக்கங்களுக்காக இஸ்ரேலுடன் உறவுகளைத் தொடரும் சவுதி அரேபியா, சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளைப் போலவே இலங்கையும் செயல்படும்.இலங்கை ஒரு சுதந்திர பாலஸ்தீன நாடு மற்றும் ஒரு சுதந்திர இஸ்ரேல் அரசை நம்புகிறது என்றும், இலங்கை இஸ்ரேலுடன் அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளைத் தொடர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.