வவுனியா மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் விநியோகம் இன்று கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க மற்றும் மாவட்ட செயலாளர் பி.ஏ. சரத்சந்ர ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது.
வவுனியா மாவட்டத்தில் 1874 குடும்பங்களைச் சேர்ந்த 6509 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்கள் 43 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்படுள்ளனர்.
அவர்களிற்கு ஒரு வாரத்திற்கு ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு ரூ. 2100 வீதம் தேவையான உலர் உணவுப் பொருட்கள் இவ்வாறு விநியோகிக்கப்பட்டன.
டிட்வா புயலால் 6,123 குடும்பங்களைச் சேர்ந்த 20,282 பேர் பாதிக்கப்பட்டனர்.
வவுனியா, வவுனியா தெற்கு, வெங்கலசெட்டிகுளம் மற்றும் நெடுங்கேணி பிரதேச செயலகப் பிரிவுகளில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் இந்த உலர் உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன.
வவுனியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வவுனியா மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் விநியோகம் இன்று கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க மற்றும் மாவட்ட செயலாளர் பி.ஏ. சரத்சந்ர ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது.வவுனியா மாவட்டத்தில் 1874 குடும்பங்களைச் சேர்ந்த 6509 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்கள் 43 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்படுள்ளனர். அவர்களிற்கு ஒரு வாரத்திற்கு ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு ரூ. 2100 வீதம் தேவையான உலர் உணவுப் பொருட்கள் இவ்வாறு விநியோகிக்கப்பட்டன.டிட்வா புயலால் 6,123 குடும்பங்களைச் சேர்ந்த 20,282 பேர் பாதிக்கப்பட்டனர்.வவுனியா, வவுனியா தெற்கு, வெங்கலசெட்டிகுளம் மற்றும் நெடுங்கேணி பிரதேச செயலகப் பிரிவுகளில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் இந்த உலர் உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன.