• May 01 2025

50 கோடிக்கு நாய் வாங்கினாரா? ஆய்வுக்கு சென்றவர்களுக்கு - காத்திருந்த அதிர்ச்சி

Thansita / Apr 19th 2025, 10:30 pm
image

பெங்களூரு ஜே.பி.நகரை சேர்ந்த 51 வயதுடைய தொழிலதிபரான சதீஸ், விலை உயர்ந்த நாய்களை வாங்கி வளர்ப்பதும் அந்த நாய்களை பொது நிகழ்ச்சிகளுக்கு அழைத்து செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார் 

அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காக்கேஷியன் ஷெப்பர்ட் வகையை சேர்ந்த நாய் ஒன்றை வாங்கி சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அந்த வளர்ப்பு நாயுடன் கலந்து கொண்டார்.

ரூ.50 கோடி விலை கொடுத்து இந்த நாயை வாங்கியதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் கூறினார். 

இத் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளாக மாறியது.

குறித்த விடயம் தொடர்பில் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது

இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள், தொழில் அதிபர் சதீஸ் வீட்டில் சோதனை நடத்தினர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது

நாய் வாங்கியதற்கான எந்த ஆவணங்களும் சிக்கவில்லை. 

 இதையடுத்து சதீஸ் ரூ.50 கோடி கொடுத்து நாய் வாங்கியது பொய்யான தகவல் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

50 கோடிக்கு நாய் வாங்கினாரா ஆய்வுக்கு சென்றவர்களுக்கு - காத்திருந்த அதிர்ச்சி பெங்களூரு ஜே.பி.நகரை சேர்ந்த 51 வயதுடைய தொழிலதிபரான சதீஸ், விலை உயர்ந்த நாய்களை வாங்கி வளர்ப்பதும் அந்த நாய்களை பொது நிகழ்ச்சிகளுக்கு அழைத்து செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார் அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காக்கேஷியன் ஷெப்பர்ட் வகையை சேர்ந்த நாய் ஒன்றை வாங்கி சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அந்த வளர்ப்பு நாயுடன் கலந்து கொண்டார்.ரூ.50 கோடி விலை கொடுத்து இந்த நாயை வாங்கியதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் கூறினார். இத் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளாக மாறியது.குறித்த விடயம் தொடர்பில் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதுஇதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள், தொழில் அதிபர் சதீஸ் வீட்டில் சோதனை நடத்தினர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளதுநாய் வாங்கியதற்கான எந்த ஆவணங்களும் சிக்கவில்லை.  இதையடுத்து சதீஸ் ரூ.50 கோடி கொடுத்து நாய் வாங்கியது பொய்யான தகவல் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement