இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியில் ஆபத்தான பற்றீரியா உள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் ஜெர்மன் ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் இந்தத் தகவல் வெளிவந்துள்ளது.
புற்றுநோய் மருந்தான ரிட்டுக்ஸிமாப்பின் ஒரு தொகுதியில் உப்பு கரைசல் மட்டுமே இருப்பதாகவும் சட்டமா அதிபர் துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இரண்டு மருந்துகளிலும் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இருப்பதாக சோதனை முடிவுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மனித இம்யூனோகுளோபுலின் மருந்தில் சிகிச்சை கூறுகள் இல்லை. அதற்கு பதிலாக பற்றீரியாவால் மாசுபட்ட நீர் இருந்தது. ரிட்டுக்ஸிமாப்பில் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் புரதங்கள் எதுவும் இல்லை, மேலும் சோடியம் குளோரைடு மட்டுமே இருந்தது.
இந்த தடுப்பூசி மருந்து சந்தேக நபரான முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலியா ரம்புக்வெல்ல சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தின் அடிப்படையில், இலங்கை அரசாங்கம் இந்த கொள்முதலுக்காக 144.74 மில்லியன் ரூபா செலவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தடுப்பூசியில் ஆபத்தான பற்றீரியா - சோதனையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியில் ஆபத்தான பற்றீரியா உள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் ஜெர்மன் ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் இந்தத் தகவல் வெளிவந்துள்ளது. புற்றுநோய் மருந்தான ரிட்டுக்ஸிமாப்பின் ஒரு தொகுதியில் உப்பு கரைசல் மட்டுமே இருப்பதாகவும் சட்டமா அதிபர் துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.இரண்டு மருந்துகளிலும் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இருப்பதாக சோதனை முடிவுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.மனித இம்யூனோகுளோபுலின் மருந்தில் சிகிச்சை கூறுகள் இல்லை. அதற்கு பதிலாக பற்றீரியாவால் மாசுபட்ட நீர் இருந்தது. ரிட்டுக்ஸிமாப்பில் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் புரதங்கள் எதுவும் இல்லை, மேலும் சோடியம் குளோரைடு மட்டுமே இருந்தது.இந்த தடுப்பூசி மருந்து சந்தேக நபரான முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலியா ரம்புக்வெல்ல சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தின் அடிப்படையில், இலங்கை அரசாங்கம் இந்த கொள்முதலுக்காக 144.74 மில்லியன் ரூபா செலவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.