• Apr 30 2026

வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

Chithra / Jan 29th 2026, 10:45 am
image

 

வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ASP)  ரோஹன் ஒலுகல நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.


தற்போதைய பதவிக்கு மேலதிகமாக, அவர் விசேட பணிக்குழுவுடன் இணைக்கப்பட்டு, நாடு முழுவதும் பொருந்தும் சட்டவிரோத போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராகவும் பணியாற்றுவார்.


உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்  ரோஹன் ஒலுகலா, பெரிய குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்காக ஏராளமான உள்ளூர் மற்றும் சர்வதேச பொலிஸ் நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கியுள்ளார்.


ஒலுகல தலைமையில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட அண்மைய பொலிஸ் நடவடிக்கைகளில் இந்தோனேசியாவில் கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சாலிந்த உள்ளிட்ட குற்றவாளிகளைக் கைது செய்ததும், நேபாளத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவன் கணேமுல்லா சஞ்சீவாவின் கொலையில் முக்கிய சந்தேக நபரான இஷார செவ்வந்தி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டதும் அடங்கும்.

வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்  வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ASP)  ரோஹன் ஒலுகல நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.தற்போதைய பதவிக்கு மேலதிகமாக, அவர் விசேட பணிக்குழுவுடன் இணைக்கப்பட்டு, நாடு முழுவதும் பொருந்தும் சட்டவிரோத போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராகவும் பணியாற்றுவார்.உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்  ரோஹன் ஒலுகலா, பெரிய குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்காக ஏராளமான உள்ளூர் மற்றும் சர்வதேச பொலிஸ் நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கியுள்ளார்.ஒலுகல தலைமையில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட அண்மைய பொலிஸ் நடவடிக்கைகளில் இந்தோனேசியாவில் கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சாலிந்த உள்ளிட்ட குற்றவாளிகளைக் கைது செய்ததும், நேபாளத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவன் கணேமுல்லா சஞ்சீவாவின் கொலையில் முக்கிய சந்தேக நபரான இஷார செவ்வந்தி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டதும் அடங்கும்.

Advertisement

Advertisement

Advertisement