• Apr 14 2026

அனுர எனக்கு நல்ல நண்பர்! – கூட்டு எதிர்க்கட்சியின் பேரணியில் எமது கட்சி பங்கேற்காது! மனோ கணேசன் திட்டவட்டம்

Chithra / Nov 5th 2025, 10:58 am
image


நவம்பர் 21 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டு எதிர்க்கட்சி பேரணியில் தனது கட்சி பங்கேற்காது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களிடம் பேசிய மனோ கணேசன், 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுடனான பிரச்சினைகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது என்ற கருத்துக்களை மறுத்த மனோ கணேசன், எந்த அரசியல்வாதிகளுடனும் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றார்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) முடிவு குறித்து தனக்கு உறுதியாக தெரியவில்லை என்றும் அவர்   தெரிவித்துள்ளார். 

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகரவின் தோளைப் பிடித்துக்கொண்டு, அவர்கள் அனைவரும் நல்ல நண்பர்கள் என்று கூறிய மனோ கணேசன், “அனுரவும் எனக்கு நல்ல நண்பர்” என்று தெரிவித்துள்ளார். 

அனுர எனக்கு நல்ல நண்பர் – கூட்டு எதிர்க்கட்சியின் பேரணியில் எமது கட்சி பங்கேற்காது மனோ கணேசன் திட்டவட்டம் நவம்பர் 21 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டு எதிர்க்கட்சி பேரணியில் தனது கட்சி பங்கேற்காது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.ஊடகவியலாளர்களிடம் பேசிய மனோ கணேசன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுடனான பிரச்சினைகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது என்ற கருத்துக்களை மறுத்த மனோ கணேசன், எந்த அரசியல்வாதிகளுடனும் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றார்.பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) முடிவு குறித்து தனக்கு உறுதியாக தெரியவில்லை என்றும் அவர்   தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகரவின் தோளைப் பிடித்துக்கொண்டு, அவர்கள் அனைவரும் நல்ல நண்பர்கள் என்று கூறிய மனோ கணேசன், “அனுரவும் எனக்கு நல்ல நண்பர்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement