மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு அடியார்கள் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு இன்று மூன்றாவது தினமாக நடைபெற்றுவருகின்றது.
இராமபிரானால் வழிபடப்பட்ட ஆலயம், மூர்த்தி, தலம், தீர்த்தம் ஒருங்கே கொண்ட ஆலயம் என பல்வேறு சிறப்புகளை கொண்ட மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 02ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு கடந்த 23ஆம் திகதி கிரியைகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 26ஆம் திகதி தொடக்கம் அடியார்கள் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றுவருகின்றது.
தற்போது நடைபெற்றுவரும் அடியார்கள் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வானது எதிர்வரும் 01ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 06மணி வரையில் நடைபெறவுள்ளதுடன் இரவு பகலாக பக்தர்கள் எண்ணெய்காப்பு சாத்தும் வகையிலான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகம் முன்னெடுத்துள்ளது.
எதிர்வரும் புதன்கிழமை காலை ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு அடியார்கள் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு இன்று மூன்றாவது தினமாக நடைபெற்றுவருகின்றது.இராமபிரானால் வழிபடப்பட்ட ஆலயம், மூர்த்தி, தலம், தீர்த்தம் ஒருங்கே கொண்ட ஆலயம் என பல்வேறு சிறப்புகளை கொண்ட மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 02ஆம் திகதி நடைபெறவுள்ளது.இதனை முன்னிட்டு கடந்த 23ஆம் திகதி கிரியைகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 26ஆம் திகதி தொடக்கம் அடியார்கள் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றுவருகின்றது.தற்போது நடைபெற்றுவரும் அடியார்கள் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வானது எதிர்வரும் 01ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 06மணி வரையில் நடைபெறவுள்ளதுடன் இரவு பகலாக பக்தர்கள் எண்ணெய்காப்பு சாத்தும் வகையிலான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகம் முன்னெடுத்துள்ளது.எதிர்வரும் புதன்கிழமை காலை ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.