• Aug 08 2025

கென்யாவில் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான விமானம் - 6 பேர் பலி

Chithra / Aug 8th 2025, 10:32 am
image


கென்யா தலைநகர் நைரோபியில் மருத்துவர்களால் இயக்கப்படும் செஸ்னா விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

நைரோபியில் உள்ள வில்சன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட வைத்திய விமானம்  சோமாலிலாந்து செல்லும் வழியில் நைரோபிக்கு அருகிலுள்ள ம்விஹோகோ என்ற குடியிருப்பு பகுதியில் விபத்துக்குள்ளானது. 

நேற்றிரவு  இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த விபத்தில் விமானத்தில் இருந்த நான்கு பேர் மற்றும் தரையில் இருந்த இரண்டு பேர் என மொத்தம் ஆறு பேர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  

விமானம் புறப்பட்ட மூன்று நிமிடங்களில் தொடர்பை இழந்ததாக கென்யா சிவில் ஏவியேஷன் ஆணையம் தெரிவித்துள்ளது. 

விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது.


கென்யாவில் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான விமானம் - 6 பேர் பலி கென்யா தலைநகர் நைரோபியில் மருத்துவர்களால் இயக்கப்படும் செஸ்னா விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நைரோபியில் உள்ள வில்சன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட வைத்திய விமானம்  சோமாலிலாந்து செல்லும் வழியில் நைரோபிக்கு அருகிலுள்ள ம்விஹோகோ என்ற குடியிருப்பு பகுதியில் விபத்துக்குள்ளானது. நேற்றிரவு  இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த நான்கு பேர் மற்றும் தரையில் இருந்த இரண்டு பேர் என மொத்தம் ஆறு பேர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  விமானம் புறப்பட்ட மூன்று நிமிடங்களில் தொடர்பை இழந்ததாக கென்யா சிவில் ஏவியேஷன் ஆணையம் தெரிவித்துள்ளது. விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement