• Jun 13 2025

லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்து:மீட்புப் பணிகள் தீவிரம்; பயணிகளின் நிலை?

Sharmi / Jun 12th 2025, 3:16 pm
image

குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி இன்று பிற்பகல் 1.10 மணியளவில் புறப்பட்ட ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமான நிலையத்துக்கு அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியது.

இந்த விபத்தை அடுத்து அப்பகுதியில் இருந்து கரும்புகை பெருமளவில் வெளியாகி வருகிறது. 

விபத்து குறித்த தகவல் அறிந்ததும், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், தீ அணைப்புத் துறையினர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

குறித்த விமானத்தில் 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் உட்பட 242 பேர் பயணித்துள்ள நிலையில் பயணிகளின் நிலை  குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்து:மீட்புப் பணிகள் தீவிரம்; பயணிகளின் நிலை குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி இன்று பிற்பகல் 1.10 மணியளவில் புறப்பட்ட ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமான நிலையத்துக்கு அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியது.இந்த விபத்தை அடுத்து அப்பகுதியில் இருந்து கரும்புகை பெருமளவில் வெளியாகி வருகிறது. விபத்து குறித்த தகவல் அறிந்ததும், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், தீ அணைப்புத் துறையினர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.குறித்த விமானத்தில் 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் உட்பட 242 பேர் பயணித்துள்ள நிலையில் பயணிகளின் நிலை  குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement