• Jun 29 2025

ஹிக்கடுவவில் கவிழ்ந்த நெடுநாள் மீன்பிடி படகு; பாதிப்பு ஏற்படாமல் தப்பிய மீனவர்கள்

Chithra / Jun 29th 2025, 8:37 am
image



ஹிக்கடுவவில் நெடுநாள் மீன்பிடிப் படகொன்று நேற்று மாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

ஹிக்கடுவ மீன்பிடித் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட நெடுநாள் மீன்பிடி படகொன்றே  துறைமுகத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானது. 

விபத்துக்குள்ளான நெடுநாள் மீன்பிடி படகில் 06 மீனவர்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும் மீனவர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் அவர்கள்  பாதுகாப்புடன் மீட்கப்பட்டனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

விபத்தில்  படகு சேதமடைந்துள்ளதுடன், எண்ணெய் கசிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் 

படகிலிருந்த பொருட்கள் அகற்றப்பட்டு வருகின்றது என்று ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதேவேளை -  தெவுந்தர மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட மீன்பிடி படகு  ஒன்று  வர்த்தக கப்பலுடன் மோதி இன்று விபத்துக்குள்ளானது. 

விபத்துக்குள்ளான படகில் நான்கு மீனவர்கள்  பயணித்த நிலையில் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டதுடன் படகில் சிக்கிய நிலையில் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார் என்று கடற்படை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

தொடர்ந்து மீனவ படகுகள் விபத்துக்குள்ளாகி வருவது மீனவ சமூகத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.


ஹிக்கடுவவில் கவிழ்ந்த நெடுநாள் மீன்பிடி படகு; பாதிப்பு ஏற்படாமல் தப்பிய மீனவர்கள் ஹிக்கடுவவில் நெடுநாள் மீன்பிடிப் படகொன்று நேற்று மாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. ஹிக்கடுவ மீன்பிடித் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட நெடுநாள் மீன்பிடி படகொன்றே  துறைமுகத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான நெடுநாள் மீன்பிடி படகில் 06 மீனவர்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மீனவர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் அவர்கள்  பாதுகாப்புடன் மீட்கப்பட்டனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில்  படகு சேதமடைந்துள்ளதுடன், எண்ணெய் கசிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் படகிலிருந்த பொருட்கள் அகற்றப்பட்டு வருகின்றது என்று ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை -  தெவுந்தர மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட மீன்பிடி படகு  ஒன்று  வர்த்தக கப்பலுடன் மோதி இன்று விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான படகில் நான்கு மீனவர்கள்  பயணித்த நிலையில் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டதுடன் படகில் சிக்கிய நிலையில் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார் என்று கடற்படை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மீனவ படகுகள் விபத்துக்குள்ளாகி வருவது மீனவ சமூகத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

Advertisement

Advertisement

Advertisement