யாழ்ப்பாணம் வடமராட்சி அம்பன் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளனர்.
இதில் ஒருவர் மீது சரமாரியான வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
அம்பன் பகுதியிலிருந்து குடத்தனையிலுள்ள வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தபோது வழிமறித்து வாள் வெட்டு தாக்குதல் மேற்கொண்டதாகவும்,
வாளால் வெட்டிய நபர் தாக்குதலுக்கு உள்ளானவர்களது வீட்டிற்கு அத்துமீறி சென்று கதவுகள் மற்றும் வீட்டின் யன்னல்களையும் சேதப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதுதொடர்பில் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபர் பல்வேறு வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்றும், பல்வேறு வழக்குகளில் பிணையில் உள்ளவர் என்றும் மருதங்கேணி பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
குடத்தனை பகுதியில் மூவர் மீது வாள்வெட்டு யாழ்ப்பாணம் வடமராட்சி அம்பன் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளனர். இதில் ஒருவர் மீது சரமாரியான வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,அம்பன் பகுதியிலிருந்து குடத்தனையிலுள்ள வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தபோது வழிமறித்து வாள் வெட்டு தாக்குதல் மேற்கொண்டதாகவும்,வாளால் வெட்டிய நபர் தாக்குதலுக்கு உள்ளானவர்களது வீட்டிற்கு அத்துமீறி சென்று கதவுகள் மற்றும் வீட்டின் யன்னல்களையும் சேதப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதுதொடர்பில் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.குறித்த வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபர் பல்வேறு வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்றும், பல்வேறு வழக்குகளில் பிணையில் உள்ளவர் என்றும் மருதங்கேணி பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.