புத்தளம், சிலாபம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விலத்தவ பிரதேசத்தில் கணவன் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (16) மாலை இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குடும்பத்தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வாயு துப்பாக்கியை பயன்படுத்தி இவ்வாறு துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவத்தையடுத்து கணவன் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றுள்ள நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவியை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்திய கணவன் இலங்கையில் இன்று பரபரப்பு புத்தளம், சிலாபம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விலத்தவ பிரதேசத்தில் கணவன் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (16) மாலை இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குடும்பத்தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.வாயு துப்பாக்கியை பயன்படுத்தி இவ்வாறு துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.சம்பவத்தையடுத்து கணவன் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றுள்ள நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.