ஹம்பாந்தோட்டையில் 5000 பேருக்கான கருத்தரங்கு மண்டபம் ஒன்றை அமைத்து மக்கள் பணத்தை வீணடித்துள்ளார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் கவுசல்யா ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் பாராளுமன்றில் நிதி செயல்நுணுக்கக்கூற்று சட்டமூலம் தொடர்பான பிரேரணையை முன்வைத்து தேசியமக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கௌஷல்யா ஆரியரத்ன உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்
கடந்தகால அரசுகளின் சுயநலப்போக்கான செயல்களினால் நாடு அதள பாதாளத்திற்கு சென்றிருந்தது. அரசாங்கங்கள் வெளிப்படைத்தன்மையைப் பேணுகின்ற அரசாங்கங்களாக இருக்கவேண்டும். இதன்மூலம் மக்களுக்கு நியாயமான பொறுப்புக்கூறும் அரசாங்கமாக செயற்படமுடியும்.
கசப்பான கடந்தகாலத்தை எமது நாட்டில் உருவாக்கியவர்களை சிறையில் தள்ள தேவையான நடவடிக்கைகளை எமது தேசியமக்கள் சக்தி அரசாங்கம் எடுத்துவருகிறது.
2026 இல் மொத்த தேசிய உற்பத்தியில் அரச வருமானத்தை நூற்றுக்கு பத்து வீதமாக கொண்டுவருவதற்கு எதிர்பார்க்கின்றோம். 2025 இல் நேர்மறை வளர்ச்சியை நாங்கள் அடைந்துள்ளோம்.
எமது நாட்டில் காணப்பட்ட ஆபத்தான நிலைமை என்னவெனில் பொதுமக்களின் நிதிக்கு பொறுப்புக்கூறாமை ஆகும். இதனை இல்லாதொழிக்கும் நிதிமுறைமை ஒன்றுக்கு ஆதரவு வழங்க இச்சட்டமூலத்தை ஆதரிக்குமாறு நான் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.
5000 பேருக்கு மண்டபம் கட்டி மக்கள் பணம் வீணடிப்பு கௌசல்யா எம்பி சீற்றம் ஹம்பாந்தோட்டையில் 5000 பேருக்கான கருத்தரங்கு மண்டபம் ஒன்றை அமைத்து மக்கள் பணத்தை வீணடித்துள்ளார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் கவுசல்யா ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.இன்றைய தினம் பாராளுமன்றில் நிதி செயல்நுணுக்கக்கூற்று சட்டமூலம் தொடர்பான பிரேரணையை முன்வைத்து தேசியமக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கௌஷல்யா ஆரியரத்ன உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் கடந்தகால அரசுகளின் சுயநலப்போக்கான செயல்களினால் நாடு அதள பாதாளத்திற்கு சென்றிருந்தது. அரசாங்கங்கள் வெளிப்படைத்தன்மையைப் பேணுகின்ற அரசாங்கங்களாக இருக்கவேண்டும். இதன்மூலம் மக்களுக்கு நியாயமான பொறுப்புக்கூறும் அரசாங்கமாக செயற்படமுடியும்.கசப்பான கடந்தகாலத்தை எமது நாட்டில் உருவாக்கியவர்களை சிறையில் தள்ள தேவையான நடவடிக்கைகளை எமது தேசியமக்கள் சக்தி அரசாங்கம் எடுத்துவருகிறது. 2026 இல் மொத்த தேசிய உற்பத்தியில் அரச வருமானத்தை நூற்றுக்கு பத்து வீதமாக கொண்டுவருவதற்கு எதிர்பார்க்கின்றோம். 2025 இல் நேர்மறை வளர்ச்சியை நாங்கள் அடைந்துள்ளோம்.எமது நாட்டில் காணப்பட்ட ஆபத்தான நிலைமை என்னவெனில் பொதுமக்களின் நிதிக்கு பொறுப்புக்கூறாமை ஆகும். இதனை இல்லாதொழிக்கும் நிதிமுறைமை ஒன்றுக்கு ஆதரவு வழங்க இச்சட்டமூலத்தை ஆதரிக்குமாறு நான் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.