ஊழல் மோசடியில்லாத மக்களுக்கான ஒரு ஆட்சியை தேசிய மக்கள் சக்தி நாட்டில் முன்னெடுத்து வருகின்றது என்று பாராளுமன்ற உறுப்பினரும் கரையோரப் பிரதேசங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான ஏ.ஆதம்பாவா தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் உள்ள உள்ளுராட்சி மன்ற புதிய உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு நேற்று (16) அக்கரைப்பற்று மாநகர சபை ஹல்லாஜ் மண்டபத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது பிரதேச மக்கள் இரவு பகல் பாராது உங்களது வீட்டைத்தட்டுவார்கள், தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வார்கள். அவர்களை வரவேற்று அவர்களது பிரச்சினைகளை கேட்டறிந்து அவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாறாக அதிகாரம் கிடைத்துவிட்டது என்பதற்காக அசட்டையாக இருந்துவிடக்கூடாது. இதனை தேசிய மக்கள் சக்தி ஒருபோதும் அங்கீகரிக்காது என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் .
நாட்டையும்,தேசத்தையும்,மக்களையும், பிராந்தியத்தையும் அபிவிருத்தி செய்யக்கூடிய வாய்ப்புக் கிடைத்திருக்கின்றது. உங்களுக்குக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பினை உங்களுக்கு வாக்களித்த, வாக்களிக்காத மக்களுக்கும் பணியாற்ற வேண்டும்.
சபையின் சட்டதிட்டங்களை நன்றாகப்படித்து அதற்கேற்றால்போல் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். ஊழல் மோசடியில்லாத மக்களுக்கான ஒரு ஆட்சியை தேசிய மக்கள் சக்தி நாட்டில் முன்னெடுத்து வருகின்றமை நீங்கள் எல்லோரும் அறிந்த விடயமாகும்.- என்றார்.
ஊழல் மோசடியற்ற ஆட்சியே தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி ; - ஆதம்பாவா எம்.பி புகழாரம். ஊழல் மோசடியில்லாத மக்களுக்கான ஒரு ஆட்சியை தேசிய மக்கள் சக்தி நாட்டில் முன்னெடுத்து வருகின்றது என்று பாராளுமன்ற உறுப்பினரும் கரையோரப் பிரதேசங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான ஏ.ஆதம்பாவா தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் உள்ள உள்ளுராட்சி மன்ற புதிய உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு நேற்று (16) அக்கரைப்பற்று மாநகர சபை ஹல்லாஜ் மண்டபத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எமது பிரதேச மக்கள் இரவு பகல் பாராது உங்களது வீட்டைத்தட்டுவார்கள், தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வார்கள். அவர்களை வரவேற்று அவர்களது பிரச்சினைகளை கேட்டறிந்து அவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாறாக அதிகாரம் கிடைத்துவிட்டது என்பதற்காக அசட்டையாக இருந்துவிடக்கூடாது. இதனை தேசிய மக்கள் சக்தி ஒருபோதும் அங்கீகரிக்காது என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் .நாட்டையும்,தேசத்தையும்,மக்களையும், பிராந்தியத்தையும் அபிவிருத்தி செய்யக்கூடிய வாய்ப்புக் கிடைத்திருக்கின்றது. உங்களுக்குக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பினை உங்களுக்கு வாக்களித்த, வாக்களிக்காத மக்களுக்கும் பணியாற்ற வேண்டும்.சபையின் சட்டதிட்டங்களை நன்றாகப்படித்து அதற்கேற்றால்போல் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். ஊழல் மோசடியில்லாத மக்களுக்கான ஒரு ஆட்சியை தேசிய மக்கள் சக்தி நாட்டில் முன்னெடுத்து வருகின்றமை நீங்கள் எல்லோரும் அறிந்த விடயமாகும்.- என்றார்.