• Jun 30 2025

செம்மணி தொடர்பில் நீதியான விசாரணை உறுதி; கார்பன் பரிசோதனைக்கான ஆய்வுகூடத்தை கோரியுள்ளோம்! அமைச்சர் பிமல் தெரிவிப்பு

Chithra / Jun 30th 2025, 8:58 am
image


செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை நடத்துவோம் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் நேற்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மனித எலும்புக்கூடுகளைக் கார்பன் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான ஆய்வுகூடம் ஒன்றை வழங்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

மனிதப் புதைகுழி, காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை எவ்வளவு ஆழமானது என்பதை நாம் அறிவோம். ஆகவே, செம்மணி மனிதப் புதைகுழிக்கான நீதியை நீதிமன்றச் செயன்முறைக்கு உட்படுத்தப்பட்டு வழங்குவோம்.

அரசு என்ற ரீதியில் இந்த மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளுக்கு மில்லியன் கணக்கான நிதியை ஒதுக்கியுள்ளோம். - என்றார்.

செம்மணி தொடர்பில் நீதியான விசாரணை உறுதி; கார்பன் பரிசோதனைக்கான ஆய்வுகூடத்தை கோரியுள்ளோம் அமைச்சர் பிமல் தெரிவிப்பு செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை நடத்துவோம் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,மனித எலும்புக்கூடுகளைக் கார்பன் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான ஆய்வுகூடம் ஒன்றை வழங்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.மனிதப் புதைகுழி, காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை எவ்வளவு ஆழமானது என்பதை நாம் அறிவோம். ஆகவே, செம்மணி மனிதப் புதைகுழிக்கான நீதியை நீதிமன்றச் செயன்முறைக்கு உட்படுத்தப்பட்டு வழங்குவோம்.அரசு என்ற ரீதியில் இந்த மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளுக்கு மில்லியன் கணக்கான நிதியை ஒதுக்கியுள்ளோம். - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement