• Jul 01 2025

சேவையிலிருந்து நிறுத்தப்பட்ட 600 பஸ்கள் மீண்டும் சேவையில்!

Bus
Chithra / Jul 1st 2025, 8:54 am
image


முன்னர் சேவையில் இருந்து நிறுத்தப்பட்ட 600 பஸ்கள் பழுதுபார்க்கப்பட்டு மீண்டும் சேவையில் சேர்க்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் நிதி ஒதுக்கியுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்து சபை பஸ்களின் தொகுப்பை விரிவுபடுத்துவதற்கு மேலதிகமாக, செயல்பாட்டு திறனை பாதித்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களிடையே உள்ள வெற்றிடங்களை அடையாளம் காண நாடு தழுவிய மதிப்பீடு நடத்தப்பட்டுள்ளது.

பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திட்டம் பிரதமரின் துணைக்குழுவின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

சேவையிலிருந்து நிறுத்தப்பட்ட 600 பஸ்கள் மீண்டும் சேவையில் முன்னர் சேவையில் இருந்து நிறுத்தப்பட்ட 600 பஸ்கள் பழுதுபார்க்கப்பட்டு மீண்டும் சேவையில் சேர்க்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் நிதி ஒதுக்கியுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.இலங்கை போக்குவரத்து சபை பஸ்களின் தொகுப்பை விரிவுபடுத்துவதற்கு மேலதிகமாக, செயல்பாட்டு திறனை பாதித்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களிடையே உள்ள வெற்றிடங்களை அடையாளம் காண நாடு தழுவிய மதிப்பீடு நடத்தப்பட்டுள்ளது.பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திட்டம் பிரதமரின் துணைக்குழுவின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement