மட்டக்களப்பில் நேற்றிரவு இடம்பெற்ற கோரவிபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி 5ம் கட்டை பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாகவுள்ள சந்தியில் நேற்றிரவு 10 மணியளவில் வானொன்றும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் புதிய காத்தான்குடி 06 ஆலிம் வீதி தோணா சந்தி பகுதியில் வசிக்கும் 21 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த வேன் அக்கரைப்பற்றை சேர்ந்த பாடசாலை மாணவர்கள் கல்விச் சுற்றுலா சென்று திரும்பிக்கொண்டிருந்த வேளை இவ் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ் விபத்தில் காயமடைந்த நபர் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கல்விச் சுற்றுலாவுக்கு சென்று திரும்பிய வான் விபத்து: இளைஞன் உயிரிழப்பு. மட்டக்களப்பில் நேற்றிரவு இடம்பெற்ற கோரவிபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி 5ம் கட்டை பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாகவுள்ள சந்தியில் நேற்றிரவு 10 மணியளவில் வானொன்றும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் புதிய காத்தான்குடி 06 ஆலிம் வீதி தோணா சந்தி பகுதியில் வசிக்கும் 21 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.குறித்த வேன் அக்கரைப்பற்றை சேர்ந்த பாடசாலை மாணவர்கள் கல்விச் சுற்றுலா சென்று திரும்பிக்கொண்டிருந்த வேளை இவ் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இவ் விபத்தில் காயமடைந்த நபர் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.