• Apr 21 2026

QR முறையால் ரயில் சேவைகள் பாதிக்கப்படுமா? - வெளியான முக்கிய அறிவிப்பு

Chithra / Mar 17th 2026, 8:24 am
image

 

நாட்டில் மீண்டும் எரிபொருள் QR குறியீடு முறைமை அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும், ரயில் சேவைகள் எவ்வித தடையுமின்றி வழமை போல் இயங்கும் என  ரயில்வே  திணைக்களம் அறிவித்துள்ளது.


இது தொடர்பாக  ரயில்வே  திணைக்களத்தின் பொது மேலாளர் கே. ரவீந்திர பத்மப்பிரிய வழங்கிய விளக்கத்தில், 


ரயில் சேவைகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) நேரடியாக வழங்குவதாக தெரிவித்துள்ளார்.


பொதுமக்களுக்கான QR ஒதுக்கீட்டு முறைமை ரயில் சேவைக்கு பொருந்தாது.


இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள பிரத்தியேக எரிபொருள் நிலையங்கள் ஊடாகவே ரயில்களுக்கு எரிபொருள் நிரப்பப்படுகிறது.


மேலும் ரயில்கள் திட்டமிட்டபடி தடையின்றி இயங்கும் என அவர் உறுதியளித்துள்ளார். ரயில்வே  திணைக்களத்திற்கு என ஒதுக்கப்பட்ட எரிபொருள் நிலையங்கள், ரயில் நடவடிக்கைகளுக்காக மாத்திரமே பயன்படுத்தப்படும்.


அங்கிருந்து தனியார் துறைக்கோ அல்லது ஏனைய வாகனங்களுக்கோ எரிபொருள் வழங்கப்பட மாட்டாது என அவர் தெளிவுபடுத்தினார்.

QR முறையால் ரயில் சேவைகள் பாதிக்கப்படுமா - வெளியான முக்கிய அறிவிப்பு  நாட்டில் மீண்டும் எரிபொருள் QR குறியீடு முறைமை அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும், ரயில் சேவைகள் எவ்வித தடையுமின்றி வழமை போல் இயங்கும் என  ரயில்வே  திணைக்களம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக  ரயில்வே  திணைக்களத்தின் பொது மேலாளர் கே. ரவீந்திர பத்மப்பிரிய வழங்கிய விளக்கத்தில், ரயில் சேவைகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) நேரடியாக வழங்குவதாக தெரிவித்துள்ளார்.பொதுமக்களுக்கான QR ஒதுக்கீட்டு முறைமை ரயில் சேவைக்கு பொருந்தாது.இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள பிரத்தியேக எரிபொருள் நிலையங்கள் ஊடாகவே ரயில்களுக்கு எரிபொருள் நிரப்பப்படுகிறது.மேலும் ரயில்கள் திட்டமிட்டபடி தடையின்றி இயங்கும் என அவர் உறுதியளித்துள்ளார். ரயில்வே  திணைக்களத்திற்கு என ஒதுக்கப்பட்ட எரிபொருள் நிலையங்கள், ரயில் நடவடிக்கைகளுக்காக மாத்திரமே பயன்படுத்தப்படும்.அங்கிருந்து தனியார் துறைக்கோ அல்லது ஏனைய வாகனங்களுக்கோ எரிபொருள் வழங்கப்பட மாட்டாது என அவர் தெளிவுபடுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement