யாழ் மாநகரத்தின் முன்னேற்றத்திற்கு பிரித்தானியாவின் ஒத்துழைப்பு வழமை போன்று வழங்கப்படும் என்று இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பெட்ரிக் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் - மாநகரசபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராசா - இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பெட்ரிக் ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (18) யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சந்திப்பில் இரு தரப்பினரும் கலந்துரையாடிய விடங்களாவன,
மாநகரத்தின் தற்போதைய நிலமைகள், முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேலைத்திட்டங்கள் மற்றும் மாநகரசபையின் தேவைகள் தொடர்பில் உயர்ஸ்தானிகருக்கு முதல்வர் தெளிவுபடுத்தினார்.
மேலும் வடக்கு மாகாணத்தில் அரசினால் காடுகள் என்ற வரையறைக்குள் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் ஊடாக கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள், இதன் மூலம் வடக்கு மக்கள் பாதிக்கப்படும் விதம், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் விசேட தெளிவுபடுத்தல்களை வழங்கியதுடன், அது தொடர்பான ஆவணம் ஒன்றினையும் உயர்ஸ்தானிகருக்கு முதல்வர் கையளித்தார்.
முதல்வர் குறிப்பிட்ட விடயங்களை கேட்ட பிரித்தானிய உயர்ஸ்தானிகர் இவ் விடயங்கள் தொடர்பில் மத்திய அரசினதும், துறைசார் தரப்பினரதும் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும், இவ் ஆவணங்களை பார்வையிட்டு உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் வடக்கு மக்கள் நலன் சார்ந்த விடயங்களிலும் மற்றும் யாழ்ப்பாணம் மாநகரத்தின் மக்கள் நலன் சார்ந்த முன்னேற்றகரமான வேலைத்திட்டங்களிலும் தங்களது நாட்டினதும், தூதரகத்தினதும் ஒத்துழைப்புக்கள் வழமை போன்று இருக்கும் என்றும், இது தொடர்பில் எதிர்காலத்தில் தொடர்ந்தும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து இணைந்து பயணிக்க தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்தின் முன்னேற்றத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம் - இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் யாழ் மாநகரத்தின் முன்னேற்றத்திற்கு பிரித்தானியாவின் ஒத்துழைப்பு வழமை போன்று வழங்கப்படும் என்று இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பெட்ரிக் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - மாநகரசபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராசா - இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பெட்ரிக் ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (18) யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது.இந்த சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சந்திப்பில் இரு தரப்பினரும் கலந்துரையாடிய விடங்களாவன, மாநகரத்தின் தற்போதைய நிலமைகள், முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேலைத்திட்டங்கள் மற்றும் மாநகரசபையின் தேவைகள் தொடர்பில் உயர்ஸ்தானிகருக்கு முதல்வர் தெளிவுபடுத்தினார்.மேலும் வடக்கு மாகாணத்தில் அரசினால் காடுகள் என்ற வரையறைக்குள் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் ஊடாக கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள், இதன் மூலம் வடக்கு மக்கள் பாதிக்கப்படும் விதம், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் விசேட தெளிவுபடுத்தல்களை வழங்கியதுடன், அது தொடர்பான ஆவணம் ஒன்றினையும் உயர்ஸ்தானிகருக்கு முதல்வர் கையளித்தார்.முதல்வர் குறிப்பிட்ட விடயங்களை கேட்ட பிரித்தானிய உயர்ஸ்தானிகர் இவ் விடயங்கள் தொடர்பில் மத்திய அரசினதும், துறைசார் தரப்பினரதும் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும், இவ் ஆவணங்களை பார்வையிட்டு உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டார்.மேலும் வடக்கு மக்கள் நலன் சார்ந்த விடயங்களிலும் மற்றும் யாழ்ப்பாணம் மாநகரத்தின் மக்கள் நலன் சார்ந்த முன்னேற்றகரமான வேலைத்திட்டங்களிலும் தங்களது நாட்டினதும், தூதரகத்தினதும் ஒத்துழைப்புக்கள் வழமை போன்று இருக்கும் என்றும், இது தொடர்பில் எதிர்காலத்தில் தொடர்ந்தும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து இணைந்து பயணிக்க தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.