• Apr 14 2026

மத்திய கிழக்கில் தீவிரமாகும் போர்; மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!

shanu / Mar 9th 2026, 3:02 pm
image

மத்திய கிழக்கில் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளதால் மசகு எண்ணெய் உற்பத்தி மற்றும் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.


இதனால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


அதன்படி, ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று 112.98 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.


அதேபோல் டபிள்யூ.டி.ஐ ரக மசகு எண்ணெய்யின் விலை பீப்பாய் ஒன்று 110.17 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் பலர் உயிரிழந்து வருகின்றதுடன் பலர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


போர் தீவிரமான நிலையில் அனைத்து நாடுகளிலும் ஏதோவொரு பாதிப்பு ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கில் தீவிரமாகும் போர்; மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு மத்திய கிழக்கில் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளதால் மசகு எண்ணெய் உற்பத்தி மற்றும் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அதன்படி, ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று 112.98 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.அதேபோல் டபிள்யூ.டி.ஐ ரக மசகு எண்ணெய்யின் விலை பீப்பாய் ஒன்று 110.17 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் பலர் உயிரிழந்து வருகின்றதுடன் பலர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போர் தீவிரமான நிலையில் அனைத்து நாடுகளிலும் ஏதோவொரு பாதிப்பு ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement