• Jun 17 2025

அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மொட்டுக் கட்சி அலுவலகத்திற்கு திடீர் விஜயம்

Chithra / Feb 14th 2025, 1:38 pm
image

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இன்றைய தினம் (14) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

காலை 10 மணியளவில் கட்சி அலுவலகத்திற்கு சென்ற அமெரிக்கத் தூதுவர், ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக அங்கு இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொதுஜன பெரமுன அலுவலகத்திற்கு வருகை தருமாறு விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைவாக அவர் அங்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கத் தூதுவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சஞ்சீவ எதிரிமான்ன, C.B. ரத்நாயக்க, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க ஆகியோர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

சந்திப்பு குறித்து நாமல் எம்.பி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில்  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பால் கடைப்பிடிக்கப்பட்ட தலையிடாத வெளியுறவுக் கொள்கைக் கொள்கையையும், வரி செலுத்துவோர் நிதியைப் பயன்படுத்துவதில் அதிக வெளிப்படைத்தன்மைக்கு அவர் விடுத்த அழைப்பையும் நாங்கள் பாராட்டுகிறோம்

மேலும், அமெரிக்க வரி செலுத்துவோர் வளங்களை ஒதுக்குவதில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதில் கவனம் செலுத்தி, இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட மற்றும் பதிவுசெய்யப்படாத அரசு சாரா நிறுவனங்கள் USAID நிதியைப் பயன்படுத்துவதை விசாரிக்க ஒரு பாராளுமன்றத் தேர்வுக் குழுவை அமைக்க வேண்டும் என்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்மொழிவு குறித்து சுங்கிற்கு விளக்கினோம் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மொட்டுக் கட்சி அலுவலகத்திற்கு திடீர் விஜயம் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இன்றைய தினம் (14) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.காலை 10 மணியளவில் கட்சி அலுவலகத்திற்கு சென்ற அமெரிக்கத் தூதுவர், ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக அங்கு இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.பொதுஜன பெரமுன அலுவலகத்திற்கு வருகை தருமாறு விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைவாக அவர் அங்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அமெரிக்கத் தூதுவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சஞ்சீவ எதிரிமான்ன, C.B. ரத்நாயக்க, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க ஆகியோர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.சந்திப்பு குறித்து நாமல் எம்.பி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில்  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பால் கடைப்பிடிக்கப்பட்ட தலையிடாத வெளியுறவுக் கொள்கைக் கொள்கையையும், வரி செலுத்துவோர் நிதியைப் பயன்படுத்துவதில் அதிக வெளிப்படைத்தன்மைக்கு அவர் விடுத்த அழைப்பையும் நாங்கள் பாராட்டுகிறோம்மேலும், அமெரிக்க வரி செலுத்துவோர் வளங்களை ஒதுக்குவதில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதில் கவனம் செலுத்தி, இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட மற்றும் பதிவுசெய்யப்படாத அரசு சாரா நிறுவனங்கள் USAID நிதியைப் பயன்படுத்துவதை விசாரிக்க ஒரு பாராளுமன்றத் தேர்வுக் குழுவை அமைக்க வேண்டும் என்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்மொழிவு குறித்து சுங்கிற்கு விளக்கினோம் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now