மித்தெனியவில் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் துப்பாக்கிதாரர்களின் மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பாந்தோட்டை, மித்தெனிய, தோரகொலயாய பிரதேசத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில் இரண்டு ஆண்களின் சடலங்கள் கடந்த புதன்கிழமை (25) பொலிஸாரால் மீட்கப்பட்டன.
துப்பாக்கிச்சூட்டில் 25 மற்றும் 30 வயதிக்கு இடைப்பட்ட இருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எனினும் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.
துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணைகளை மூன்று விசேட விசாரணைக் குழுக்கள், மித்தெனிய பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்டு வந்த நிலையில் கொலைக்கு துப்பாக்கிதாரிகள் பயன்படுத்திய மோட்டார்சைக்கிள் நேற்று (26) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மோட்டார் சைக்கிள் கடந்த 21 ஆம் திகதி காலி - அக்மீமன பிரதேசத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் வைத்து திருடப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன் இந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்ட அடுத்த நாள் மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் அக்மீமன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.
மித்தெனியவில் இருவர் சுட்டுக்கொலை ; துப்பாக்கிதாரிகளின் மோட்டார் சைக்கிள் மீட்பு மித்தெனியவில் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் துப்பாக்கிதாரர்களின் மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பாந்தோட்டை, மித்தெனிய, தோரகொலயாய பிரதேசத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில் இரண்டு ஆண்களின் சடலங்கள் கடந்த புதன்கிழமை (25) பொலிஸாரால் மீட்கப்பட்டன. துப்பாக்கிச்சூட்டில் 25 மற்றும் 30 வயதிக்கு இடைப்பட்ட இருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எனினும் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணைகளை மூன்று விசேட விசாரணைக் குழுக்கள், மித்தெனிய பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்டு வந்த நிலையில் கொலைக்கு துப்பாக்கிதாரிகள் பயன்படுத்திய மோட்டார்சைக்கிள் நேற்று (26) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த மோட்டார் சைக்கிள் கடந்த 21 ஆம் திகதி காலி - அக்மீமன பிரதேசத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் வைத்து திருடப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.அத்துடன் இந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்ட அடுத்த நாள் மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் அக்மீமன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.