• Jun 28 2025

20 வருடங்களின் பின் தந்தையின் கல்லறைக்கு சென்ற மகன்

Chithra / Jun 27th 2025, 7:36 pm
image


படுகொலைசெய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கத்தின் புதல்வர் ஜோசப்பரராஜசிங்கம் டேவிட் 20 வருடங்களுக்கு பின்னர் இன்றைய தினம் மட்டக்களப்புக்கு வருகைதந்த நிலையில் படுகொலைசெய்யப்பட்ட ஜோசப்பரராசிங்கத்தின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

புதூர் பகுதியில் உள்ள மயானத்தில் படுகொலைசெய்யப்பட்ட ஜோசப்பரராஜசிங்கத்தின் நினைவுத்தூபியில் அவரின் மகன் சுடர் ஏற்றி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதன்போது தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன், பிரதி முதல்வர் டினேஸ் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

20 வருடங்களின் பின் தந்தையின் கல்லறைக்கு சென்ற மகன் படுகொலைசெய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கத்தின் புதல்வர் ஜோசப்பரராஜசிங்கம் டேவிட் 20 வருடங்களுக்கு பின்னர் இன்றைய தினம் மட்டக்களப்புக்கு வருகைதந்த நிலையில் படுகொலைசெய்யப்பட்ட ஜோசப்பரராசிங்கத்தின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.புதூர் பகுதியில் உள்ள மயானத்தில் படுகொலைசெய்யப்பட்ட ஜோசப்பரராஜசிங்கத்தின் நினைவுத்தூபியில் அவரின் மகன் சுடர் ஏற்றி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.இதன்போது தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன், பிரதி முதல்வர் டினேஸ் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement