• Apr 17 2026

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர்கள் இருவர் கைது!

Chithra / Apr 5th 2026, 12:27 pm
image

சுமார் 36 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற இரண்டு சீன நாட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இன்று ஞாயிற்றுக்கிழமை (05) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தின்,  ஊடாக இந்த சிகரெட் தொகையை கடத்திச்செல்ல முயன்ற போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்டவர்கள் 23 மற்றும் 24 வயதுடைய சீன நாட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


 இவர்கள் இன்று அதிகாலை 01:10க்கு சீனாவின் குன்மிங் நகரிலிருந்து சைனா ஈஸ்டர்ன் விமான சேவைக்கு சொந்தமான MU-713 என்ற விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.


சந்தேகநபர்களிடமிருந்து 24,200 சிகரெட்டுகள் அடங்கிய பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 


கைது செய்யப்பட்ட இருவரையும் தடுத்து வைத்துள்ள கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள், இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர்கள் இருவர் கைது சுமார் 36 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற இரண்டு சீன நாட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இன்று ஞாயிற்றுக்கிழமை (05) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தின்,  ஊடாக இந்த சிகரெட் தொகையை கடத்திச்செல்ல முயன்ற போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் 23 மற்றும் 24 வயதுடைய சீன நாட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று அதிகாலை 01:10க்கு சீனாவின் குன்மிங் நகரிலிருந்து சைனா ஈஸ்டர்ன் விமான சேவைக்கு சொந்தமான MU-713 என்ற விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.சந்தேகநபர்களிடமிருந்து 24,200 சிகரெட்டுகள் அடங்கிய பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட இருவரையும் தடுத்து வைத்துள்ள கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள், இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  

Advertisement

Advertisement

Advertisement