• Aug 01 2026

இலங்கையின் உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: 15 இலட்சம் பேர் பாதிக்கப்படலாமென எச்சரிக்கை

Chithra / Jul 31st 2026, 9:31 am
image


2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை இலங்கையில் சுமார் 10 இலட்சம் முதல் 15 இலட்சம் வரையான மக்களுக்கு மனிதாபிமான உணவு உதவி தேவைப்படக்கூடும் என அமெரிக்காவின் ஆதரவுடன் செயல்படும் பஞ்சம் தொடர்பான முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளின் வலையமைப்பு (FEWS NET) தெரிவித்துள்ளது.


அந்த அறிக்கையின்படி, எதிர்வரும் ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் நாட்டின் உணவுப் பாதுகாப்பு நிலை மேலும் சவாலானதாக மாறக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் நகர்ப்புற வேலைவாய்ப்புகளில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், உணவு, போக்குவரத்து, மின்சாரம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


இந்த செலவின அதிகரிப்புக்கு ஏற்ப மக்களின் வருமானம் உயராத நிலையில், குடும்பங்களின் பொருளாதார பாதிப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன் விளைவாக, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் உணவின் அளவையும் நாளாந்த உணவு வேளைகளின் எண்ணிக்கையையும் குறைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


குறிப்பாக, ஈர வலய பெருந்தோட்டப் பகுதிகளில் வசிக்கும் குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்கள், மேற்கு, வடக்கு மற்றும் கிழக்கு கடலோரப் பகுதிகளைச் சேர்ந்த கடற்றொழிலாளர் குடும்பங்கள், அத்துடன் நகர்ப்புற மற்றும் நகர்ப்புறத்தை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் வறிய மக்கள் ஆகியோர் அதிக ஆபத்தில் உள்ள குழுக்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


மேலும், போக்குவரத்து செலவுகள் மற்றும் விவசாய உற்பத்திக்கான உள்ளீட்டு செலவுகள் அதிகரித்துள்ளதால், சந்தையில் உணவுப் பொருட்களின் விலைகள் செப்டம்பர் மாதம் வரை உயர்ந்த நிலையிலேயே நீடிக்கக்கூடும் எனவும்  தெரிவித்துள்ளது.


தற்போது பெரிய அளவிலான அவசர மனிதாபிமான உணவு உதவித் திட்டங்கள் நடைமுறையில் இல்லாத நிலையில், நாட்டின் உணவுப் பாதுகாப்பு தொடர்பான சவால்கள் எதிர்வரும் மாதங்களில் மேலும் தீவிரமடையக்கூடும் எனவும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. 

இலங்கையின் உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: 15 இலட்சம் பேர் பாதிக்கப்படலாமென எச்சரிக்கை 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை இலங்கையில் சுமார் 10 இலட்சம் முதல் 15 இலட்சம் வரையான மக்களுக்கு மனிதாபிமான உணவு உதவி தேவைப்படக்கூடும் என அமெரிக்காவின் ஆதரவுடன் செயல்படும் பஞ்சம் தொடர்பான முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளின் வலையமைப்பு (FEWS NET) தெரிவித்துள்ளது.அந்த அறிக்கையின்படி, எதிர்வரும் ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் நாட்டின் உணவுப் பாதுகாப்பு நிலை மேலும் சவாலானதாக மாறக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் நகர்ப்புற வேலைவாய்ப்புகளில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், உணவு, போக்குவரத்து, மின்சாரம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்த செலவின அதிகரிப்புக்கு ஏற்ப மக்களின் வருமானம் உயராத நிலையில், குடும்பங்களின் பொருளாதார பாதிப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் விளைவாக, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் உணவின் அளவையும் நாளாந்த உணவு வேளைகளின் எண்ணிக்கையையும் குறைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.குறிப்பாக, ஈர வலய பெருந்தோட்டப் பகுதிகளில் வசிக்கும் குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்கள், மேற்கு, வடக்கு மற்றும் கிழக்கு கடலோரப் பகுதிகளைச் சேர்ந்த கடற்றொழிலாளர் குடும்பங்கள், அத்துடன் நகர்ப்புற மற்றும் நகர்ப்புறத்தை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் வறிய மக்கள் ஆகியோர் அதிக ஆபத்தில் உள்ள குழுக்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.மேலும், போக்குவரத்து செலவுகள் மற்றும் விவசாய உற்பத்திக்கான உள்ளீட்டு செலவுகள் அதிகரித்துள்ளதால், சந்தையில் உணவுப் பொருட்களின் விலைகள் செப்டம்பர் மாதம் வரை உயர்ந்த நிலையிலேயே நீடிக்கக்கூடும் எனவும்  தெரிவித்துள்ளது.தற்போது பெரிய அளவிலான அவசர மனிதாபிமான உணவு உதவித் திட்டங்கள் நடைமுறையில் இல்லாத நிலையில், நாட்டின் உணவுப் பாதுகாப்பு தொடர்பான சவால்கள் எதிர்வரும் மாதங்களில் மேலும் தீவிரமடையக்கூடும் எனவும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement