• Jun 25 2025

மனைவியை பிரிந்து வாழ்ந்த இளம் குடும்பஸ்தர் எடுத்த விபரீத முடிவு; யாழில் பயங்கரம்

Chithra / Jun 25th 2025, 7:44 am
image


யாழில் மனைவியை பிரிந்து வாழ்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

கீரிமலை வீதி, நல்லிணக்கபுரம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய சிறிமோகன் கஜேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இவர் கடந்த ஒன்றரை வருடங்களாக மனைவியை பிரிந்து வாழ்ந்துள்ளார். 

இவர் கடந்த 22ஆம் திகதி அதிகாலை மனைவியின் தந்தையின் வீட்டுக்கு சென்று தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். 

பின்னர் உறவினர்கள் அவரை மீட்டு தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். 

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் யாழில் தவறான முடிவெடுத்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். 

பண்டத்தரிப்பு - சாந்தை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய முத்தன் பிரேம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் 23ஆம் திகதி தனது வீட்டில் தூக்கில் தொங்கி உயிர்மாய்த்துள்ளார். பின்னர் உறவினர்கள் சடலத்தை மீட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

சடலம் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகள் செய்யப்பட்டது.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

மனைவியை பிரிந்து வாழ்ந்த இளம் குடும்பஸ்தர் எடுத்த விபரீத முடிவு; யாழில் பயங்கரம் யாழில் மனைவியை பிரிந்து வாழ்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.கீரிமலை வீதி, நல்லிணக்கபுரம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய சிறிமோகன் கஜேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,இவர் கடந்த ஒன்றரை வருடங்களாக மனைவியை பிரிந்து வாழ்ந்துள்ளார். இவர் கடந்த 22ஆம் திகதி அதிகாலை மனைவியின் தந்தையின் வீட்டுக்கு சென்று தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். பின்னர் உறவினர்கள் அவரை மீட்டு தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்துள்ளார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.இந்நிலையில் யாழில் தவறான முடிவெடுத்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். பண்டத்தரிப்பு - சாந்தை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய முத்தன் பிரேம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இவர் 23ஆம் திகதி தனது வீட்டில் தூக்கில் தொங்கி உயிர்மாய்த்துள்ளார். பின்னர் உறவினர்கள் சடலத்தை மீட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.சடலம் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகள் செய்யப்பட்டது.சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement