தற்போது தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என பாதுகாப்பு செயலாளர், ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொன்னா தெரிவித்தார்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு சீனா நன்கொடை அளிக்கும் அதிகாரப்பூர்வ விழாவில் பங்கேற்று பாதுகாப்பு செயலாளர் இதனை தெரிவித்தார்.
பாதாள உலகம் ஒருபோதும் தேசிய பாதுகாப்புடன் நேரடியாக தொடர்புடையது அல்ல, அது பொது பாதுகாப்பு அமைச்சினால் கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்புக்கும் பொலிஸாருக்கும் தேவையான ஆதரவை நாங்கள் வழங்குகிறோம். தேசிய பாதுகாப்புக்கு எந்த ஆபத்தும் இல்லை.
பாதாள உலகம் அரசியல் பாதுகாப்பை இழந்துவிட்டது. அதனால்தான் துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்படுகின்றன. பாதாள உலகம் குழப்பத்தில் உள்ளது.
பாதாள உலக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். பொது பாதுகாப்பு அமைச்சு வேலைத்திட்டம் ஒன்றை செயல்படுத்துகிறது.
அதற்கு சட்ட கட்டமைப்பிற்குள் நாங்கள் கட்டுப்பாடுகளை வழங்குகிறோம் என பாதுகாப்பு செயலாளர் மேலும் தெரிவித்தார்.
பாதாள உலகம் குழப்பத்தில் உள்ளது; தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை அரசு அறிவிப்பு தற்போது தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என பாதுகாப்பு செயலாளர், ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொன்னா தெரிவித்தார். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு சீனா நன்கொடை அளிக்கும் அதிகாரப்பூர்வ விழாவில் பங்கேற்று பாதுகாப்பு செயலாளர் இதனை தெரிவித்தார். பாதாள உலகம் ஒருபோதும் தேசிய பாதுகாப்புடன் நேரடியாக தொடர்புடையது அல்ல, அது பொது பாதுகாப்பு அமைச்சினால் கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார். தேசிய பாதுகாப்புக்கும் பொலிஸாருக்கும் தேவையான ஆதரவை நாங்கள் வழங்குகிறோம். தேசிய பாதுகாப்புக்கு எந்த ஆபத்தும் இல்லை. பாதாள உலகம் அரசியல் பாதுகாப்பை இழந்துவிட்டது. அதனால்தான் துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்படுகின்றன. பாதாள உலகம் குழப்பத்தில் உள்ளது. பாதாள உலக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். பொது பாதுகாப்பு அமைச்சு வேலைத்திட்டம் ஒன்றை செயல்படுத்துகிறது.அதற்கு சட்ட கட்டமைப்பிற்குள் நாங்கள் கட்டுப்பாடுகளை வழங்குகிறோம் என பாதுகாப்பு செயலாளர் மேலும் தெரிவித்தார்.