மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்கியா அகதிகள் குழுவை இலங்கையில் தொடர்ந்து தடுத்து வைத்திருப்பது குறித்து இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது
இதன்படி இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் (Marc-André Franche) இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார்.
2024 டிசம்பரில், 116 ரோஹிங்கியாக்கள் கொண்ட குழு கடல் வழியாக இலங்கைக்கு வந்து, பின்னர் முல்லைத்தீவில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர்களை மீட்டு மனிதாபிமான உதவிகளை வழங்கியதற்காக அரசாங்கத்தையும் இலங்கை கடற்படையையும் பாராட்டிய அவர்,
அரசாங்கத்துடனான நீண்டகால ஒப்பந்தத்தின்படிஇ அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையகத்தை அணுகவும், பதிவு செய்ய அதிகாரிகளை வலியுறுத்தினார்.
மியான்மருக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள ரோஹிங்கியா மக்கள் ஏற்கனவே உள்ள மோசமான சூழ்நிலைகள் மேலும் மோசமடைவதை எதிர்கொள்கின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா அகதிகள் குறித்து ஐ.நா. கவலை மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்கியா அகதிகள் குழுவை இலங்கையில் தொடர்ந்து தடுத்து வைத்திருப்பது குறித்து இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளதுஇதன்படி இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் (Marc-André Franche) இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார்.2024 டிசம்பரில், 116 ரோஹிங்கியாக்கள் கொண்ட குழு கடல் வழியாக இலங்கைக்கு வந்து, பின்னர் முல்லைத்தீவில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.அவர்களை மீட்டு மனிதாபிமான உதவிகளை வழங்கியதற்காக அரசாங்கத்தையும் இலங்கை கடற்படையையும் பாராட்டிய அவர், அரசாங்கத்துடனான நீண்டகால ஒப்பந்தத்தின்படிஇ அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையகத்தை அணுகவும், பதிவு செய்ய அதிகாரிகளை வலியுறுத்தினார்.மியான்மருக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள ரோஹிங்கியா மக்கள் ஏற்கனவே உள்ள மோசமான சூழ்நிலைகள் மேலும் மோசமடைவதை எதிர்கொள்கின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.