• May 23 2026

கண்டாவளையில் “கிளீன் ஸ்ரீ லங்கா” திட்டத்தின் இரண்டாவது நடமாடும் சேவை!

Ziya / Jan 2nd 2026, 4:16 pm
image

கிளீன் ஸ்ரீ லங்கா நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவின் இரண்டாவது நடமாடும் சேவை வேலைத்திட்டம் இன்று நடைபெற்றுள்ளது.

குறித்த நடமாடும் சேவை ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலில் கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் தலைமையில் கல்லாறு தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இந்த நடமாடும் சேவையில் பல்வேறு சேவைகள், பணிகள் மக்களுக்கு ஒரே நாளில் முன்னெடுக்கப்பட்டது.

குறிப்பாக பிறப்பு, இறப்பு மற்றும் உத்தேச வயது சான்றிதழ்கள் தொடர்பான சேவைகள், ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள் (தேசிய அடையாள அட்டை), ஓய்வூதியம் தொடர்பான சேவைகள், மோட்டார் வாகன பதிவு மற்றும் வாகன வருமான அனுமதிப்பத்திரம் தொடர்பான சேவைகள், வியாபார பெயர்ப் பதிவு தொடர்பான சேவைகள், காணி தொடர்பான சேவைகள், சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், நலன்புரி நன்மைகள் தொடர்பான சேவைகள், முதியோர் தேசிய செயலகத்தினால் வழங்கப்படும் சேவைகள், சிறுவர் பெண்கள் உரிமைகள் தொடர்பான சேவைகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவு தொடர்பான சேவைகள், திறன் அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழிற்கல்வி வழிகாட்டல்கள், மனிதவள அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழில் வழிகாட்டல்கள், கைத்தொழில் திணைக்களம் தொடர்பான சேவைகள், கிராம அபிவிருத்தி பிரிவு தொடர்பான சேவைகள், சமய, கலாசாரப்பிரிவு தொடர்பான சேவைகள், சொத்தழிவு/காணாமல் போனோர் தொடர்பான சேவைகள், சமுர்த்தி கடன் சேவைகள், பிரதேச சபைகளால் வழங்கப்படும் சேவைகள், கமநல அபிவிருத்தி திணைக்களம் தொடர்பான சேவைகள், ஆயுள்வேத திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், விவசாயத்

இந் நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், அரச அதிபர் எஸ்.முரளிதரன்,மாவட்ட மேலதிக அரச அதிபர் நளாயினி இன்பராஜ்,மேலதிக அரச அதிபர் காணி அஜிதா பிரதீபன் ,கரைச்சி பிரதேச சபை தவிசாளர், தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன், ,வடக்கு வலயத்திற்கு பொறுப்பான மேலதிக பதிவாளர் ,பிரதேச சபை உறுப்பினர்கள், கண்டாவளை பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், நடமாடும் சேவையுடன் தொடர்புடைய திணைக்கள தலைவர்கள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இவ் நடமாடும் சேவையானது ஜனாதிபதி செயலகத்தின் நிதி அனுசரணையுடன்,தொடர்ச்சியாக பிரதேச செயலக ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருவதோடு மக்களுக்கு ஒரே இடத்தில் அவர்களது பல்வேறு தேவைகளை பெற்றுக் கொள்ளக்கூடியதாக தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நடமாடும் சேவையில் பெருந்திரளான மக்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.

கண்டாவளையில் “கிளீன் ஸ்ரீ லங்கா” திட்டத்தின் இரண்டாவது நடமாடும் சேவை கிளீன் ஸ்ரீ லங்கா நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவின் இரண்டாவது நடமாடும் சேவை வேலைத்திட்டம் இன்று நடைபெற்றுள்ளது. குறித்த நடமாடும் சேவை ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலில் கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் தலைமையில் கல்லாறு தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்றது. இந்த நடமாடும் சேவையில் பல்வேறு சேவைகள், பணிகள் மக்களுக்கு ஒரே நாளில் முன்னெடுக்கப்பட்டது.குறிப்பாக பிறப்பு, இறப்பு மற்றும் உத்தேச வயது சான்றிதழ்கள் தொடர்பான சேவைகள், ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள் (தேசிய அடையாள அட்டை), ஓய்வூதியம் தொடர்பான சேவைகள், மோட்டார் வாகன பதிவு மற்றும் வாகன வருமான அனுமதிப்பத்திரம் தொடர்பான சேவைகள், வியாபார பெயர்ப் பதிவு தொடர்பான சேவைகள், காணி தொடர்பான சேவைகள், சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், நலன்புரி நன்மைகள் தொடர்பான சேவைகள், முதியோர் தேசிய செயலகத்தினால் வழங்கப்படும் சேவைகள், சிறுவர் பெண்கள் உரிமைகள் தொடர்பான சேவைகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவு தொடர்பான சேவைகள், திறன் அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழிற்கல்வி வழிகாட்டல்கள், மனிதவள அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழில் வழிகாட்டல்கள், கைத்தொழில் திணைக்களம் தொடர்பான சேவைகள், கிராம அபிவிருத்தி பிரிவு தொடர்பான சேவைகள், சமய, கலாசாரப்பிரிவு தொடர்பான சேவைகள், சொத்தழிவு/காணாமல் போனோர் தொடர்பான சேவைகள், சமுர்த்தி கடன் சேவைகள், பிரதேச சபைகளால் வழங்கப்படும் சேவைகள், கமநல அபிவிருத்தி திணைக்களம் தொடர்பான சேவைகள், ஆயுள்வேத திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், விவசாயத் இந் நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், அரச அதிபர் எஸ்.முரளிதரன்,மாவட்ட மேலதிக அரச அதிபர் நளாயினி இன்பராஜ்,மேலதிக அரச அதிபர் காணி அஜிதா பிரதீபன் ,கரைச்சி பிரதேச சபை தவிசாளர், தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன், ,வடக்கு வலயத்திற்கு பொறுப்பான மேலதிக பதிவாளர் ,பிரதேச சபை உறுப்பினர்கள், கண்டாவளை பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், நடமாடும் சேவையுடன் தொடர்புடைய திணைக்கள தலைவர்கள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.இவ் நடமாடும் சேவையானது ஜனாதிபதி செயலகத்தின் நிதி அனுசரணையுடன்,தொடர்ச்சியாக பிரதேச செயலக ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருவதோடு மக்களுக்கு ஒரே இடத்தில் அவர்களது பல்வேறு தேவைகளை பெற்றுக் கொள்ளக்கூடியதாக தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இந்த நடமாடும் சேவையில் பெருந்திரளான மக்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement