ஆனமடுவ, கெதேத்தேவ பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் 2 ஆம் ஆண்டு மாணவியை அதிபர் ஒருவர் தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
ஒரு நாள் பாடசாலைக்கு சமுகமளிக்காத மாணவிக்கு மரக் குச்சியால் அதிபர் தண்டித்துள்ளதாக அறியமுடிகிறது.
குறித்த சிறுமி, முந்தைய நாள் பாடசாலைக்கு செல்லாததால் கோபமடைந்த அதிபர், அருகில் இருந்த மரக் குச்சியை எடுத்து பலமுறை தாக்கியதாகக் கூறி அவரது பெற்றோர், ஆனமடுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அதன்படி, தாக்குதல் நடத்திய அதிபர் குறித்து பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்துள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு ஆளானவர் கெதேத்தேவ பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியாவார்.
அதன்படி, ஆனமடுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் சஞ்சீவ பிரேமதிலகவின் அறிவுறுத்தலின் பேரில், குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ. வன்னியாராச்சி உள்ளிட்ட குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இரண்டாம் தர மாணவிக்கு அதிபர் வழங்கிய கொடூரத் தண்டனை ஆனமடுவ, கெதேத்தேவ பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் 2 ஆம் ஆண்டு மாணவியை அதிபர் ஒருவர் தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. ஒரு நாள் பாடசாலைக்கு சமுகமளிக்காத மாணவிக்கு மரக் குச்சியால் அதிபர் தண்டித்துள்ளதாக அறியமுடிகிறது. குறித்த சிறுமி, முந்தைய நாள் பாடசாலைக்கு செல்லாததால் கோபமடைந்த அதிபர், அருகில் இருந்த மரக் குச்சியை எடுத்து பலமுறை தாக்கியதாகக் கூறி அவரது பெற்றோர், ஆனமடுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். அதன்படி, தாக்குதல் நடத்திய அதிபர் குறித்து பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு ஆளானவர் கெதேத்தேவ பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியாவார். அதன்படி, ஆனமடுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் சஞ்சீவ பிரேமதிலகவின் அறிவுறுத்தலின் பேரில், குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ. வன்னியாராச்சி உள்ளிட்ட குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.