• Jul 06 2025

மகளின் திருமணத்தில் நடனமாடிய தந்தை திடீரென மயங்கி விழுந்து மரணம்

Chithra / Jul 6th 2025, 3:43 pm
image


தனது மகளின் திருமணத்தில் நடனமாடிக் கொண்டிருந்த தந்தை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

வாதுவ மொல்லிகொட பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நிஸ்ஸங்க கிங்ஸ்லி லால் டி சில்வா  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர், வாதுவ பகுதியில் நடைபெற்ற தனது மகளின் திருமண விழாவின் இறுதியில் நடனமாடிக் கொண்டிருந்துள்ளார்.

இதன்போது திடீரென மயங்கி விழுந்த அவரை, உறவினர்கள் பாணந்துறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். 

எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மகளின் திருமணத்தில் நடனமாடிய தந்தை திடீரென மயங்கி விழுந்து மரணம் தனது மகளின் திருமணத்தில் நடனமாடிக் கொண்டிருந்த தந்தை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  வாதுவ மொல்லிகொட பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நிஸ்ஸங்க கிங்ஸ்லி லால் டி சில்வா  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த நபர், வாதுவ பகுதியில் நடைபெற்ற தனது மகளின் திருமண விழாவின் இறுதியில் நடனமாடிக் கொண்டிருந்துள்ளார்.இதன்போது திடீரென மயங்கி விழுந்த அவரை, உறவினர்கள் பாணந்துறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement