• Jun 16 2025

பணிப்பகிஷ்கரிப்புக்கு தயாராகும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

Chithra / Jun 15th 2025, 3:39 pm
image


வைத்தியர்களின் மேலதிக நேர கொடுப்பனவு திருத்தங்கள் தொடர்பான சுற்றறிக்கை உடனடியாக வெளியிடப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலதிக நேரக் கொடுப்பனவு திருத்தங்கள் தொடர்பான சுற்றறிக்கைகள் உடனடியாக வெளியிடப்படாவிட்டால், ஜூன் 30ஆம் திகதிக்குப் பின்னர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளரும் ஊடகப் பேச்சாளருமான சமில் விஜேசிங்க, கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

நீண்ட காலமாக மேலதிக நேரக் கொடுப்பனவு தொடர்பான திருத்தங்களை அரசாங்கத்திடம் GMOA கோரி வருகின்றது. இந்த கொடுப்பனவு, வைத்தியர்கள் மேற்கொள்ளும் மேலதிக பணிச்சுமைக்கு ஈடாக வழங்கப்படும் நிதி உதவியாகும். எனினும், இதற்கான சுற்றறிக்கைகள் இதுவரை உரிய முறையில் வெளியிடப்படவில்லை என சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய சமில் விஜேசிங்க, “அரச வைத்தியர்களின் கூடுதல் கடமைகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். இது தொடர்பான சுற்றறிக்கைகள் உடனடியாக வெளியிடப்படாவிட்டால், எமது சங்கம் ஜூன் 30ஆம் திகதிக்குப் பின்னர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும். இது நோயாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தினாலும், அரசாங்கத்தின் உடனடி நடவடிக்கையின்மையே இதற்கு காரணமாக இருக்கும்,” என வலியுறுத்தினார்.

பணிப்பகிஷ்கரிப்புக்கு தயாராகும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வைத்தியர்களின் மேலதிக நேர கொடுப்பனவு திருத்தங்கள் தொடர்பான சுற்றறிக்கை உடனடியாக வெளியிடப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.மேலதிக நேரக் கொடுப்பனவு திருத்தங்கள் தொடர்பான சுற்றறிக்கைகள் உடனடியாக வெளியிடப்படாவிட்டால், ஜூன் 30ஆம் திகதிக்குப் பின்னர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) எச்சரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளரும் ஊடகப் பேச்சாளருமான சமில் விஜேசிங்க, கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.நீண்ட காலமாக மேலதிக நேரக் கொடுப்பனவு தொடர்பான திருத்தங்களை அரசாங்கத்திடம் GMOA கோரி வருகின்றது. இந்த கொடுப்பனவு, வைத்தியர்கள் மேற்கொள்ளும் மேலதிக பணிச்சுமைக்கு ஈடாக வழங்கப்படும் நிதி உதவியாகும். எனினும், இதற்கான சுற்றறிக்கைகள் இதுவரை உரிய முறையில் வெளியிடப்படவில்லை என சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய சமில் விஜேசிங்க, “அரச வைத்தியர்களின் கூடுதல் கடமைகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். இது தொடர்பான சுற்றறிக்கைகள் உடனடியாக வெளியிடப்படாவிட்டால், எமது சங்கம் ஜூன் 30ஆம் திகதிக்குப் பின்னர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும். இது நோயாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தினாலும், அரசாங்கத்தின் உடனடி நடவடிக்கையின்மையே இதற்கு காரணமாக இருக்கும்,” என வலியுறுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement