• Jun 16 2025

முன்னாள் அமைச்சர்களின் நிறுவனங்கள் ஏலம் - நீதிமன்றம் உத்தரவு..!

shanuja / Jun 15th 2025, 3:31 pm
image


செலுத்தப்படாத கடன்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர்களின் நிறுவனங்களை பொது ஏலத்தில் விடுவதற்கு  கொழும்பு வணிக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


முன்னாள் அமைச்சர் தயா கமகேவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மூன்று நிறுவனங்களின் பொது ஏலத்தை நடத்தவே நீதிமன்றால் உத்தரவிடப்பட்டுள்ளது. 


தயா குரூப் லிமிடெட், தயா அப்பரல் எக்ஸ்போர்ட்டர்ஸ் (பிரைவேட்) லிமிடெட், ஒலிம்பஸ் கன்ஸ்ட்ரக்ஷன் (பிரைவேட்) லிமிடெட் ஆகிய நிறுவனங்களே ஏலத்தில்  விட உத்தரவு விடப்பட்டுள்ளது. 


நீதிமன்றப் பதிவாளர் மற்றும் துணை நிதி அதிகாரி பிறப்பித்த அறிவிப்பின்படி, ஏலம் எதிர்வரும் ஜூலை 2 ஆம் திகதி காலை 10:00 மணிக்கு நடைபெறவுள்ளது.


பீப்பிள்ஸ் லீசிங் & ஃபைனான்ஸ் பிஎல்சி சுமார்  104.2 மில்லியன் ரூபா நிலுவைத் தொகையை வசூலிக்க தாக்கல் செய்த வழக்கைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. 


மொத்த நிலுவைத் தொகையான 108.3 ரூபா மில்லியனில், இதுவரை 4.08 மில்லியன் ரூபா மட்டுமே பிரதிவாதிகளால் தீர்க்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர்களின் நிறுவனங்கள் ஏலம் - நீதிமன்றம் உத்தரவு. செலுத்தப்படாத கடன்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர்களின் நிறுவனங்களை பொது ஏலத்தில் விடுவதற்கு  கொழும்பு வணிக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முன்னாள் அமைச்சர் தயா கமகேவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மூன்று நிறுவனங்களின் பொது ஏலத்தை நடத்தவே நீதிமன்றால் உத்தரவிடப்பட்டுள்ளது. தயா குரூப் லிமிடெட், தயா அப்பரல் எக்ஸ்போர்ட்டர்ஸ் (பிரைவேட்) லிமிடெட், ஒலிம்பஸ் கன்ஸ்ட்ரக்ஷன் (பிரைவேட்) லிமிடெட் ஆகிய நிறுவனங்களே ஏலத்தில்  விட உத்தரவு விடப்பட்டுள்ளது. நீதிமன்றப் பதிவாளர் மற்றும் துணை நிதி அதிகாரி பிறப்பித்த அறிவிப்பின்படி, ஏலம் எதிர்வரும் ஜூலை 2 ஆம் திகதி காலை 10:00 மணிக்கு நடைபெறவுள்ளது.பீப்பிள்ஸ் லீசிங் & ஃபைனான்ஸ் பிஎல்சி சுமார்  104.2 மில்லியன் ரூபா நிலுவைத் தொகையை வசூலிக்க தாக்கல் செய்த வழக்கைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. மொத்த நிலுவைத் தொகையான 108.3 ரூபா மில்லியனில், இதுவரை 4.08 மில்லியன் ரூபா மட்டுமே பிரதிவாதிகளால் தீர்க்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement