ஹொரணை, பட்டகொட, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் சிக்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இன்று (03) பிற்பகல் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 44 பேர் இதுவரையில் பாதுகாப்பாகக் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
எனினும், இந்தத் தீ விபத்தில் மேலும் 11 பேர் தீக்குள் சிக்கியுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் காயமடைந்தவர் கல்பாத மற்றும் ஹொரண வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீயைக் கட்டுப்படுத்துவதற்காகவும், சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காகவும் தற்போது 3 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அப் பகுதியில் பதற்ற நிலை நிலவி வருகின்றது.
முதியோர் இல்லத்தில் பயங்கர தீ - தீக்குள் சிக்கிய 11 பேர் ஹொரணை, பட்டகொட, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் சிக்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இன்று (03) பிற்பகல் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 44 பேர் இதுவரையில் பாதுகாப்பாகக் காப்பாற்றப்பட்டுள்ளனர். எனினும், இந்தத் தீ விபத்தில் மேலும் 11 பேர் தீக்குள் சிக்கியுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் காயமடைந்தவர் கல்பாத மற்றும் ஹொரண வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தீயைக் கட்டுப்படுத்துவதற்காகவும், சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காகவும் தற்போது 3 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் அப் பகுதியில் பதற்ற நிலை நிலவி வருகின்றது.