தெற்கு ஈரானிய வான் எல்லைக்குள் ஊடுருவ முயன்ற அமெரிக்காவின் உலகப் புகழ்பெற்ற ஐந்தாம் தலைமுறை 'F-35 ஸ்டெல்த்' (F-35 Stealth Fighter) போர் விமானத்தை, தங்களின் வான் பாதுகாப்பு அமைப்புகள் இரவு முழுவதும் துல்லியமாகக் கண்காணித்து, அதன் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்துள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) அதிரடியாக அறிவித்துள்ளது.
ரேடார்களில் எளிதில் சிக்காத 'ஸ்டெல்த்' தொழில்நுட்பம் கொண்ட அமெரிக்காவின் F-35 போர் விமானம், தெற்கு ஈரான் வான் எல்லைக்கு அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் பறந்துள்ளது.
ஐ.ஆர்.ஜி.சி-யின் விண்வெளி வான் பாதுகாப்பு அமைப்புகள் (IRGC Aerospace Force), அமெரிக்காவின் இந்த அதிநவீன விமானத்தின் நகர்வுகளைத் தங்களின் மேம்படுத்தப்பட்ட ரேடார் அமைப்புகள் மூலம் இரவு முழுவதும் அணுவணுவாகக் கண்காணித்து வந்துள்ளன.
வான் எல்லையை மீறி உள்ளே நுழைய முயன்ற F-35 போர் விமானத்தை நோக்கி ஈரானிய பாதுகாப்புப் படைகள் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை ஏவி அதிரடிச் சூடு நடத்தியுள்ளன.
ஈரானின் இந்த அதிரடிப் பாய்ச்சலைத் தொடர்ந்து, அமெரிக்காவின் F-35 போர் விமானம் மற்றும் அங்கு உளவுப் பணியில் ஈடுபட்டிருந்த மற்றொரு RQ-4 குளோபல் ஹாக் (RQ-4 Global Hawk) உளவு ட்ரோனும் உடனடியாக ஈரானிய வான்வெளியை விட்டு வெளியேறியதாகத் தெஹ்ரான் தெரிவித்துள்ளது.
மேலும், வளைகுடா பகுதியில் பறந்த அமெரிக்காவின் ஒரு MQ-9 ரீப்பர் (MQ-9 Reaper) ட்ரோனைத் தாங்கள் சுட்டு வீழ்த்திவிட்டதாகவும் ஈரான் ராணுவம் உரிமை கோரியுள்ளது.
அமெரிக்க விமானத்தை இரவு முழுவதும் துரத்திய ஈரான்-வளைகுடாவில் உச்சகட்ட பதற்றம் தெற்கு ஈரானிய வான் எல்லைக்குள் ஊடுருவ முயன்ற அமெரிக்காவின் உலகப் புகழ்பெற்ற ஐந்தாம் தலைமுறை 'F-35 ஸ்டெல்த்' (F-35 Stealth Fighter) போர் விமானத்தை, தங்களின் வான் பாதுகாப்பு அமைப்புகள் இரவு முழுவதும் துல்லியமாகக் கண்காணித்து, அதன் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்துள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) அதிரடியாக அறிவித்துள்ளது.ரேடார்களில் எளிதில் சிக்காத 'ஸ்டெல்த்' தொழில்நுட்பம் கொண்ட அமெரிக்காவின் F-35 போர் விமானம், தெற்கு ஈரான் வான் எல்லைக்கு அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் பறந்துள்ளது.ஐ.ஆர்.ஜி.சி-யின் விண்வெளி வான் பாதுகாப்பு அமைப்புகள் (IRGC Aerospace Force), அமெரிக்காவின் இந்த அதிநவீன விமானத்தின் நகர்வுகளைத் தங்களின் மேம்படுத்தப்பட்ட ரேடார் அமைப்புகள் மூலம் இரவு முழுவதும் அணுவணுவாகக் கண்காணித்து வந்துள்ளன.வான் எல்லையை மீறி உள்ளே நுழைய முயன்ற F-35 போர் விமானத்தை நோக்கி ஈரானிய பாதுகாப்புப் படைகள் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை ஏவி அதிரடிச் சூடு நடத்தியுள்ளன.ஈரானின் இந்த அதிரடிப் பாய்ச்சலைத் தொடர்ந்து, அமெரிக்காவின் F-35 போர் விமானம் மற்றும் அங்கு உளவுப் பணியில் ஈடுபட்டிருந்த மற்றொரு RQ-4 குளோபல் ஹாக் (RQ-4 Global Hawk) உளவு ட்ரோனும் உடனடியாக ஈரானிய வான்வெளியை விட்டு வெளியேறியதாகத் தெஹ்ரான் தெரிவித்துள்ளது.மேலும், வளைகுடா பகுதியில் பறந்த அமெரிக்காவின் ஒரு MQ-9 ரீப்பர் (MQ-9 Reaper) ட்ரோனைத் தாங்கள் சுட்டு வீழ்த்திவிட்டதாகவும் ஈரான் ராணுவம் உரிமை கோரியுள்ளது.