தெற்கு கடற்கரையிலிருந்து ஆழ்கடலில் மீன்பிடிப் படகுகள் மூலம் சுமார் 778 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் பயணித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்ட 11 சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் கைதான சந்தேக நபர்களை இன்று கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் ஆஜர்படுத்பட்டனர் .
மேலும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் நிறைவடையாத காரணத்தால், சந்தேக நபர்களை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்குமாறு பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நீதிவானிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் .
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், சந்தேக நபர்களை ஒரு வாரம் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளனர் .
மேலும் கைது செய்யப்பட்ட 11 சந்தேக நபர்களுடன் இரண்டு படகுகளும் இன்று காலை திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
778 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் கைதான சந்தேக நபர்களை - தடுத்துவைத்து விசாரிக்க அனுமதி தெற்கு கடற்கரையிலிருந்து ஆழ்கடலில் மீன்பிடிப் படகுகள் மூலம் சுமார் 778 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் பயணித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்ட 11 சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் கைதான சந்தேக நபர்களை இன்று கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் ஆஜர்படுத்பட்டனர் .மேலும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் நிறைவடையாத காரணத்தால், சந்தேக நபர்களை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்குமாறு பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நீதிவானிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் .இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், சந்தேக நபர்களை ஒரு வாரம் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளனர் .மேலும் கைது செய்யப்பட்ட 11 சந்தேக நபர்களுடன் இரண்டு படகுகளும் இன்று காலை திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.