• Jun 25 2025

இஸ்ரேல் - ஈரான் மோதல் தாக்கம் - ஆராய உபகுழு நியமனம்!

shanuja / Jun 25th 2025, 1:25 pm
image

இஸ்ரேல் - ஈரான் மோதலை அடுத்து இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஆராய  அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

இஸ்ரேல் - ஈரான் மோதல் கடந்த இருவாரங்களாக அதிகரிக்கப்பட்டு நேற்று போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது. 

இந்த போரால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில்  பதற்ற சூழல் உருவாகியுள்ள நிலையில் குறித்த போர் தாக்கம் இலங்கையில் எந்தவகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து ஆராயவே இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. 

நியமிக்கப்பட்ட குழுவால் மத்தியகிழக்கு  போர் தொடர்பாக ஆராய்ந்து தாக்கங்கள் ஏற்படக்கூடிய துறைகள், தாக்கத்தின் அளவு மற்றும் அது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய துரித நடவடிக்கைகள் பற்றிய மீளாய்வு செய்யப்படவுள்ளது. 


அதன்படி வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்,  பெருந்தோட்டத்துறை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த விதயாரத்ன ,வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி ஆகியோரை உள்ளடக்கியதாக இந்த உபகுழுவை அமைச்சரவை நியமித்துள்ளது.

இஸ்ரேல் - ஈரான் மோதல் தாக்கம் - ஆராய உபகுழு நியமனம் இஸ்ரேல் - ஈரான் மோதலை அடுத்து இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஆராய  அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் - ஈரான் மோதல் கடந்த இருவாரங்களாக அதிகரிக்கப்பட்டு நேற்று போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது. இந்த போரால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில்  பதற்ற சூழல் உருவாகியுள்ள நிலையில் குறித்த போர் தாக்கம் இலங்கையில் எந்தவகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து ஆராயவே இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. நியமிக்கப்பட்ட குழுவால் மத்தியகிழக்கு  போர் தொடர்பாக ஆராய்ந்து தாக்கங்கள் ஏற்படக்கூடிய துறைகள், தாக்கத்தின் அளவு மற்றும் அது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய துரித நடவடிக்கைகள் பற்றிய மீளாய்வு செய்யப்படவுள்ளது. அதன்படி வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்,  பெருந்தோட்டத்துறை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த விதயாரத்ன ,வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி ஆகியோரை உள்ளடக்கியதாக இந்த உபகுழுவை அமைச்சரவை நியமித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement