மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களுடன் காலி, மாத்தறை மாவட்டங்களில் இன்று பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள் மற்றும் புத்தளம், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
புத்தளம் முதல் மாத்தறை வரை கடற்கரை பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்றும், கடல் பகுதிகளில் 30-40 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும், கற்பிட்டி முதல் மன்னார், காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை முதல் வாகரை வரையிலான கடற்கரையோரக் கடல் பகுதிகளில், காற்றின் வேகம் மணிக்கு 50-55 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இப்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால், கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கடற்கரைப் பகுதிகளில் பலத்த காற்று – மீனவர்களுக்கு எச்சரிக்கை மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களுடன் காலி, மாத்தறை மாவட்டங்களில் இன்று பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள் மற்றும் புத்தளம், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். புத்தளம் முதல் மாத்தறை வரை கடற்கரை பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்றும், கடல் பகுதிகளில் 30-40 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும், கற்பிட்டி முதல் மன்னார், காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை முதல் வாகரை வரையிலான கடற்கரையோரக் கடல் பகுதிகளில், காற்றின் வேகம் மணிக்கு 50-55 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.இப்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால், கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.