இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இன்று(08) திருகோணமலையில் உள்ள மாவட்ட கட்சி பணிமனையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றியீட்டிய மற்றும் பட்டியல் ஆசனங்கள் ஊடாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களே இவ்வாறு சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
கட்சியின் மாவட்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் அவர்களது முன்னிலையில் உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
இம்முறை நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் குச்சவெளி, தம்பலகாமம், வெருகல், மூதூர், திருகோணமலை மாநகரசபை, திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை ஆகிய பகுதிகளில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டு போட்டியிட்டனர்.
இதன் அடிப்படையிலேயே வெற்றிபெற்ற போட்டியாளர்கள் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டு சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
இதில் திருகோணமலை மாநகர சபையின் தமிழரசுக் கட்சியை சார்ந்த ஒருவர் நியமிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இன்று(08) திருகோணமலையில் உள்ள மாவட்ட கட்சி பணிமனையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றியீட்டிய மற்றும் பட்டியல் ஆசனங்கள் ஊடாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களே இவ்வாறு சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். கட்சியின் மாவட்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் அவர்களது முன்னிலையில் உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். இம்முறை நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் குச்சவெளி, தம்பலகாமம், வெருகல், மூதூர், திருகோணமலை மாநகரசபை, திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை ஆகிய பகுதிகளில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டு போட்டியிட்டனர். இதன் அடிப்படையிலேயே வெற்றிபெற்ற போட்டியாளர்கள் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டு சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். இதில் திருகோணமலை மாநகர சபையின் தமிழரசுக் கட்சியை சார்ந்த ஒருவர் நியமிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.