மேலதிக வீராங்கனையாக, இனோசி பெர்ணான்டோ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மகளிர் உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாம் அறிவிப்பு ஐ.சி.சி மகளிர் உலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாம் இன்று (10) அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சமரி அத்தபத்து தலைமையிலான 15 பேர் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்தும் இந்தப் போட்டியானது எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதி முதல் நவம்பர் 2 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. இலங்கை அணி விபரம் பின்வருமாறு, 1) சமரி அத்தபத்து (தலைவி), 2) ஹசினி பெரேரா, 3) விஸ்மி குணரத்ன, 4) ஹர்ஷிதா சமரவிக்ரம, 5) கவிஷா தில்ஹாரி, 6) நிலக்ஷி டி சில்வா, 7) அனுஷ்கா சஞ்சீவனி (உப தலைவர்), 8) இமேஷா துலானி, 9) தெவ்மி விஹங்கா, 10) பியுமி வத்சலா 11) இனோகா ரணவீர, 12) சுகந்திகா குமாரி, 13) உதேசிகா பிரபோதனி, 14) மல்கி மதரா, 15) அச்சினி குலசூரிய ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மேலதிக வீராங்கனையாக, இனோசி பெர்ணான்டோ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.