மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (26) மடுத்திருத்தல கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட அரச அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில், மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு பேரருட்திரு கலாநிதி அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
திருவிழாவில் கலந்து கொள்ளும் மக்களுக்கு தேவையான சுகாதாரம், போக்குவரத்து, குடிநீர், மின்சாரம், பாதுகாப்பு தொடர்பாக உரிய தரப்புடன் கலந்துரையாடப்பட்டது.
கடந்த 23 ஆம் திகதி மடு அன்னையின் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.தொடர்ந்து நவநாள் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மடுமாதா ஆலய திருவிழா திருப்பலி எதிர்வரும் 2 ஆம் திகதி காலை 6.15 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இதில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல இலட்சக்கணக்கான மக்கள் வருகை தர உள்ளமையினால் அதற்கான சகல விதமான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் தெரிவித்துள்ளார்.
கலந்துரையாடலில் மடு திருத்தல பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நேசன் அடிகளார், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், பொலிஸ், கடற்படை மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
மடு அன்னையின் ஆடி மாத திருவிழாவுக்கான விசேட கலந்துரையாடல் மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (26) மடுத்திருத்தல கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட அரச அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில், மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு பேரருட்திரு கலாநிதி அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.திருவிழாவில் கலந்து கொள்ளும் மக்களுக்கு தேவையான சுகாதாரம், போக்குவரத்து, குடிநீர், மின்சாரம், பாதுகாப்பு தொடர்பாக உரிய தரப்புடன் கலந்துரையாடப்பட்டது. கடந்த 23 ஆம் திகதி மடு அன்னையின் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.தொடர்ந்து நவநாள் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் மடுமாதா ஆலய திருவிழா திருப்பலி எதிர்வரும் 2 ஆம் திகதி காலை 6.15 மணிக்கு இடம்பெறவுள்ளது. இதில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல இலட்சக்கணக்கான மக்கள் வருகை தர உள்ளமையினால் அதற்கான சகல விதமான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் தெரிவித்துள்ளார்.கலந்துரையாடலில் மடு திருத்தல பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நேசன் அடிகளார், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், பொலிஸ், கடற்படை மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.