கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) மீதான பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்கக் கோரி பேத்தாழை வாழைச்சேனையில் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை இன்று (28) மேற்கொள்ளப்பட்டது.
வாழைச்சேனை பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களின் ஏற்பாட்டில் குறித்த கையெழுத்து வேட்டை ஜனாதிபதியின் கவனத்திற்கு தெரிவிக்கும் வகையில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கொழும்பு குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவினரால் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
எமது தாய் நாட்டின் இறைமையும் தேசிய ஒருமைப்பாடும் ஆபத்துக்குள்ளாகி இருந்த வேளையில் அவற்றை மீட்டெடுக்க அவர் போன்றவர்கள் ஆற்றிய சேவைகள் இன்று மறக்கப்பட்டால் எதிர்காலத்தில் சிறுபான்மை இனங்களில் இருந்து இவ்வாறான தேச பக்தர்கள் எவ்வாறு தோன்ற முடியும் என்பது தேசத்தின் ஒருமைப்பாட்டை நேசிக்கும் சகலரும் சிந்திக்க வேண்டிய தருணம் இதுவாகும்.
ஆகவே சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான விசாரணைகள் அனைத்தும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் பிடியில் இருந்து நீக்கப்பட்டு சாதாரண சட்ட நடைமுறைகளுக்கு அமைய நடத்தப்படுவதற்கு ஆவண செய்யுமாறு தயவுடன் கேட்டுக் கொள்ளுகின்றோம். அத்துடன் மேற்குறிப்பிடப்பட்ட விடயங்கள் அடங்கியதான மகஜர் ஒன்று ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. - என்றனர்.
மேலும் இந்த கையெழுத்து வேட்டை நடவடிக்கையானது மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இடம்பெறவுள்ளதாக கட்சியின் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ந.நிமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
பிள்ளையான் மீதான பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரி கையெழுத்து சேகரிப்பு - ஜனாதிபதிக்கும் மகஜர் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) மீதான பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்கக் கோரி பேத்தாழை வாழைச்சேனையில் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை இன்று (28) மேற்கொள்ளப்பட்டது.வாழைச்சேனை பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களின் ஏற்பாட்டில் குறித்த கையெழுத்து வேட்டை ஜனாதிபதியின் கவனத்திற்கு தெரிவிக்கும் வகையில் இடம்பெற்றது. கையெழுத்து சேகரிப்பில் கலந்துகொண்டவர்கள் தெரிவிக்கையில், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கொழும்பு குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவினரால் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.எமது தாய் நாட்டின் இறைமையும் தேசிய ஒருமைப்பாடும் ஆபத்துக்குள்ளாகி இருந்த வேளையில் அவற்றை மீட்டெடுக்க அவர் போன்றவர்கள் ஆற்றிய சேவைகள் இன்று மறக்கப்பட்டால் எதிர்காலத்தில் சிறுபான்மை இனங்களில் இருந்து இவ்வாறான தேச பக்தர்கள் எவ்வாறு தோன்ற முடியும் என்பது தேசத்தின் ஒருமைப்பாட்டை நேசிக்கும் சகலரும் சிந்திக்க வேண்டிய தருணம் இதுவாகும்.ஆகவே சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான விசாரணைகள் அனைத்தும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் பிடியில் இருந்து நீக்கப்பட்டு சாதாரண சட்ட நடைமுறைகளுக்கு அமைய நடத்தப்படுவதற்கு ஆவண செய்யுமாறு தயவுடன் கேட்டுக் கொள்ளுகின்றோம். அத்துடன் மேற்குறிப்பிடப்பட்ட விடயங்கள் அடங்கியதான மகஜர் ஒன்று ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. - என்றனர். மேலும் இந்த கையெழுத்து வேட்டை நடவடிக்கையானது மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இடம்பெறவுள்ளதாக கட்சியின் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ந.நிமல்ராஜ் தெரிவித்துள்ளார்.