• Apr 21 2026

இலங்கையில் இன்று கடும் வெப்பம்! - சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

Chithra / Mar 16th 2026, 7:40 am
image


இலங்கையின் பல பாகங்களில் நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை குறித்து பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இன்றைய தினம் நாட்டின் பல பகுதிகளில் மனித உடலில் உணரப்படும் வெப்பச் சுட்டெண், 'அவதானம் செலுத்த வேண்டிய' மட்டத்தில் காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.


மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மொனராகலை, மன்னார், அனுராதபுரம் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் வெப்பத்தின் தாக்கம் இன்று அதிகமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது:


வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ளப் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார மற்றும் வானிலை நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


தாகம் எடுக்காவிட்டாலும் அடிக்கடி அதிகளவு நீரை அருந்த வேண்டும்.


வயல் வெளிகள் மற்றும் திறந்தவெளி கட்டுமானத் தளங்களில் நீண்ட நேரம் வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.


வயோதிபர்கள், நோயாளர்கள் மற்றும் சிறுவர்கள் தேவையற்ற முறையில் வெயிலில் செல்வதைத் தவிர்ப்பது அவசியமாகும்.


வெளியில் செல்லும்போது குடை அல்லது தொப்பிகளைப் பயன்படுத்துவதுடன், முடிந்தவரை நிழலான இடங்களில் தங்குவது பாதுகாப்பானது.


இந்நிலையில்மத்திய, சப்ரகமுவ, தெற்கு, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மாலை 2:00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 


அதேநேரம் கிழக்கு மாகாணத்தில் சிறிய அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 


பொத்துவில் தொடக்கம் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.


புத்தளம் தொடக்கம்  கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


கடல் பிராந்தியங்களில்  மணித்தியாலத்திற்கு 20 - 30 கிலோமீற்றர் வேகத்தில் கிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும். நாட்டைச் சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.


இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

இலங்கையில் இன்று கடும் வெப்பம் - சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இலங்கையின் பல பாகங்களில் நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை குறித்து பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இன்றைய தினம் நாட்டின் பல பகுதிகளில் மனித உடலில் உணரப்படும் வெப்பச் சுட்டெண், 'அவதானம் செலுத்த வேண்டிய' மட்டத்தில் காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மொனராகலை, மன்னார், அனுராதபுரம் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் வெப்பத்தின் தாக்கம் இன்று அதிகமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது:வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ளப் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார மற்றும் வானிலை நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.தாகம் எடுக்காவிட்டாலும் அடிக்கடி அதிகளவு நீரை அருந்த வேண்டும்.வயல் வெளிகள் மற்றும் திறந்தவெளி கட்டுமானத் தளங்களில் நீண்ட நேரம் வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.வயோதிபர்கள், நோயாளர்கள் மற்றும் சிறுவர்கள் தேவையற்ற முறையில் வெயிலில் செல்வதைத் தவிர்ப்பது அவசியமாகும்.வெளியில் செல்லும்போது குடை அல்லது தொப்பிகளைப் பயன்படுத்துவதுடன், முடிந்தவரை நிழலான இடங்களில் தங்குவது பாதுகாப்பானது.இந்நிலையில்மத்திய, சப்ரகமுவ, தெற்கு, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மாலை 2:00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேநேரம் கிழக்கு மாகாணத்தில் சிறிய அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பொத்துவில் தொடக்கம் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.புத்தளம் தொடக்கம்  கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.கடல் பிராந்தியங்களில்  மணித்தியாலத்திற்கு 20 - 30 கிலோமீற்றர் வேகத்தில் கிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும். நாட்டைச் சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

Advertisement

Advertisement

Advertisement